Thursday, April 18
Shadow

பிருந்தாவனம் – திரை விமர்சனம் (வாசம்) Rank 3/5

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் கதையை கவிதையாக சொல்லுவார்கள் அதில் மிக முக்கிய இயக்குனர் என்றால் அவர் தான் ராதா மோகன் ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்கி இருக்கும் படம் என்றால் அது பிருந்தாவனம் இந்த படத்திளுக் மிக வித்தியாசமான கதையுடன் களம் இறங்கியுள்ளார். எப்பவும்போல மலை பிரேதேசம் தான் ஊட்டி பின்னியில் இந்த முறை கதை சொல்லி இருக்கிறார், சிறந்த நட்சத்திர தேர்வுகளுடன் இந்த முறையும் வெற்றிகரமாக வளம் வந்துள்ளார்.

பிருந்தாவனம் அருள்நிதி, தான்யா ரவிச்சந்திரன்,விவேக், M.S பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, செல் முருகன். மற்றும் பலர் நடிப்பில் விவேகானந்தன் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் ராதா மோகன் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் படம் தான் பிருந்தாவனம்

தனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ரோட்டில் ஆதரவின்றி திரியும் சிறுவர்களை அழைத்து ஆசிரமங்களில் சேர்த்து விடுகிறார். அவ்வாறாக சேர்த்துவிடப்படும் சிறுவர்களில் ஒருவர் தான் அருள்நிதி. தனது சிறுவயதிலிருந்தே காது கேட்காத, பேச முடியாத அருள்நிதி ஊட்டியில் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர், தனது நண்பன் செந்திலுடன் இணைந்து முடிதிருத்தும் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் தலைவாசல் விஜய்யின் மகளான நாயகி தான்யா, சிறுவயதிலிருந்தே அருள்நிதியுடன் பழகி வருகிறாள். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதி, அவ்வப்போது தான்யாவை சந்திப்பார். ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதிக்கு நடிகர் விவேக்கின் காமெடி தான் உறுதுணையாக இருந்துள்ளது. அவரது காமெடி தான் ஒரு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.

இவ்வாறாக ஒருநாள் நடிகர் விவேக்கை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருள்நிதிக்கு கிடைத்தது. விவேக்கின் நெருங்கிய நண்பரான சுப்பு பஞ்சுவுக்கு உடல்நிலை சரியில்லை. சுப்புவின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க நினைத்த விவேக், ஊட்டியில் இருக்கும் நண்பன் சுப்புவின் வீட்டுக்கு செல்கிறார்.

இவ்வாறாக ஊட்டியில் கொஞ்ச காலம் தங்கியுள்ள விவேக், ஒருநாள் வெளியே செல்லும் போது அவரது கார் சேற்றில் சிக்கிக் கொள்கிறது. அப்போது அந்த வழியாக வரும் அருள்நிதி, விவேக்கின் காரை மீட்க உதவி செய்கிறார். இதையடுத்து உதயநிதி – விவேக் இடையே நட்பு ஏற்படுகிறது. இதில், தான் விவேக்கின் தீவிர ரசிகன் என்பதை அருள்நிதி தனது சைகை பாஷையில் தெரிவிக்கிறார். இதையடுத்து அருள்நிதி – விவேக் – செந்தில் – தான்யா உள்ளிட்டோர் அடிக்கடி சந்திக்கின்றனர்.

என்னதான் நட்புடன் பழகி வந்தாலும் ஒருமனதாக அருள்நிதியை காதலித்து வருகிறார் தான்யா. ஆனால் தனது காதலை தெரிவிக்காமல் இருக்கும் தான்யாவிடம் காதலை வெளிப்படுத்தச் சொல்லி விவேக் ஊக்கப்படுத்துகிறார். விவேக்கின் பேச்சைக் கேட்டு தான்யா, தனது காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்துகிறாள். தனக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது, தான்யாவின் காதலுக்கு அவளது அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்று சில காணங்களை கூறும் அருள்நிதி, தான்யாவிடம் கோபமாக பேசி காதலை ஏற்க மறுக்கிறார்.

இதனிடையே அருள்நிதிக்கு பேச்சு வரும் என்ற உண்மை தெரிய வருகிறது. தனது சிறு வயதிலேயே அருள்நிதிக்கு பேச்சு வந்துள்ளது. ஆனால் யாரிடமும் அதனை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார். இவ்வளவு நாளாக நடித்ததாகக் கூறி அருள்நிதி மீது கோபம் கொள்ளும் தான்யா, செந்தில் அருள்நிதியிடம் சண்டைபிடித்து பிரிகின்றனர். இதையடுத்து விவேக்கின் அறிவுரையின் பேரில், தனக்கு பேச்சு வரும் என்ற உண்மையை அருள்நிதி அனைவரிடமும் தெரிவிக்கிறார்.

அருள்நிதி பேசுவதைக் கேட்ட, அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் அவர் மீது கோபங் கொள்கின்றனர். தனக்கு பேசமுடியும் என்பதை அருள்நிதி ஏன் மறைக்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையில் இருக்கும் மர்மம் என்ன? அருள்நிதி – தான்யா இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக்கதை.

காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞனாக அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அதற்காக அருள்நிதி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. கவலை தெரியாத இளைஞனாக படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
மொழி படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும். அதேபோல வாய்பேச முடியாத ஒரு ஆண் என்ன செய்வான். தனது கருத்தக்களை எப்படி வெளிப்படுத்தான் என்பதை சிறப்பாக வெளிப்படுத்திய அருள்நிதிக்கு பாராட்டுக்கள்.

விவேக் இப்படத்தில் ஒரு நடிகராகவே வாழ்ந்திருக்கிறார். தனது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவேக், வாய் பேச முடியாத ஒரு இளைஞனுடன் நட்பு பாராட்டுவதும், அவனை மகிழ்விப்பதிலும், அவனது வாழ்க்கையில் பங்கு கொள்வதிலும் தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக வெகு நாட்களுக்கு பிறகு அவரது காமெடிகள் பட்டாசாய் வெடித்திருக்கிறது. ரசிக்க வைத்திருக்கிறார்.

தான்யா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தைரியமான பெண்ணாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். அருள்நிதியுடனேயே பயணம் செய்யும் செந்தில் தனது பங்குங்கு காமெடிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

சமீப காலமாக தனது முதிர்ந்த நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்திலும் அனைவரயும் கவர்ந்திருக்கிறார். வாழ்ந்து முடித்த ஒருவனின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் நிகழ்வுகள், அவரது கண்னோட்டத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாக கூறியிருக்கிறார். குறிப்பாக இவர் பேசும் வசனங்கள் எளிமையாக இருந்தாலும், அதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது என்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

பாட்டு, சண்டைக்காட்சிகள் என்று ஏனோதானோவென்று படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான வழியில் செல்லும் இயக்குநர் ராதா மோகன், இப்படத்தையும் பூக்களை தொட்டுச் செல்லும் தென்றல் போல ரசிக்க வைத்திருக்கிறார். அன்பு, பாசம், ஏக்கம் என அனைத்தையும் ஒருங்க ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் இடமாக பிருந்தாவனத்தை இயக்கியிருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. இதுபோன்ற எதார்த்தமான கதையை இயக்கும் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். படத்தை தயாரிப்பதோடு நிற்காமல் படத்தை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான முயற்சியை மேற்கொண்டால் இது போன்ற இயக்குநர்களை ஊக்குவிக்க முடியும்.

எம்.எஸ்.விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பிருந்தாவனம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

மொத்தத்தில் பிருந்தாவனம் வாசம் உள்ள தோட்டம் Rank 3/5

Leave a Reply