Friday, March 29
Shadow

உலகில் எந்த நடிகனுக்கும் இல்லாத ரசிகை நடிகர் சிவகுமாருக்கு அவள் செய்த காரியம்

கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமாரின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நடை பெற்றதோடு அதோடு அவரின் பிறந்த நாளை பத்திரிக்கையாளர்களோடு கொண்டாடினார் அது மட்டும் இல்லாமல் அவர் நெருங்கி பழகி வந்த 6 பத்திரிக்கையாளர்கள் மேடையேறி வாழ்த்தினார்கள் அதோடு அவருடன் இருந்த சில சுவாரிசியமான விஷயங்கள் பகிர்ந்தனர் அதில் குறிப்பாக முன்னால் தேவி நிருபர் இன்றைய ராணி வார இதழ் மூத்த நிருபர் அண்ணன் மணி அவர்கள் சொன்ன ஒரு விஷயம் உலகத்திலே எந்த ஒரு நடிகனுக்கும் இப்படி ஒரு அனுபவம் அம்ற்றும் ஒரு ரசிகை இருந்து இருக்க முடியாது
43e760d7-3574-44b5-a811-acef111b721d
சிவகுமாரை ஒரு ரசிகை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை அந்த பெண் தொடர்ந்து காதலித்து வந்து இருக்கிறாள் பல நூறு காதல் கடிதங்கள் சிவகுமார் அவார்கள் அந்த பெண்ணை அழைத்து எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பல முறை கூறி இருக்கிறார் ஆனாலும் அந்த பெண் தொடர்ந்து காதலித்து வந்து இருக்கிறார் . அந்த நேரத்தில் அந்த பெண்ணை அழைத்து சிவகுமார் மற்றும் அவர் மனைவியும் பேசினார்கள் இதனால் மனம் உடைந்த பெண் உன் கருவை சும்மக்க முடியாதை கரு எனக்கு வேண்டாம் என்று அறுவை சிகிச்சை செய்துள்ளார் . இப்படி ஒரு ரசிகை உலகில் எந்த நடிகனுக்கும் இல்லை

கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமாரின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நடை பெற்றதோடு ,
அவரது திரையுலக புகைப்படங்கள் அடங்கிய விருந்தினர் மேசைப் புத்தகம் ஒன்றும் வெளியிடப் பட்டது .
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவ குமார்:” “சினிமா என் அம்மா. அவள் என்னை கைவிடமாட்டாள். என்னுடைய 150வது படத்தில் தான் 1 லட்ச ரூபாய் சம்பளமே வாங்கினேன்.

ஒரு நடிகனுக்கு முகம் நன்றாக இருக்கும் போதே, நடிப்பை நிறுத்திவிட வேண்டும் என்பதால் நடிப்பை நிறுத்திவிட்டேன். நான் பெரிய நடிகன் என்று எப்போதுமே சொல்லிக் கொண்டதில்லை.
வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு தான் இந்நிலைக்கு வந்திருக்கிறேன். என்னுடைய 14 வயது முதல் 24 வயதிற்குள் வாழ்க்கை முழுவதும் வரைய வேண்டிய ஓவியங்களை வரைந்து முடித்துவிட்டேன்.
இதனை நான் கர்வத்துடனும், பெருமையுடனும் சொல்லிக் கொள்வேன்.

எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த பத்திரிகையாளர்கள், எனது மகன்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். சூர்யாவின் காதல் திருமணம் பற்றியும் எழுதினார்கள். அது நடந்தது,

அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அது எனக்கு போதும். இப்போதெல்லாம் பெற்றொர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் மாறிவிட்டது.
அரேஞ்டு மேரேஜ் ஜோடிகள் அடுத்த நாள் காலையில் பிரிந்து விடுகிறார்கள்.

காலப்போக்கில் அரேஜ்டூ மேரேஜ் என்பதே இருக்காது. இனிமேல் காதல் திருமணங்கள் தான் ஜெயிக்கும். ஆண் – பெண் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரியும் போது பழகுகிறார்கள்.
அப்படி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அப்படிப்பட்டவர்களை நான் கையெடுத்து கும்பிட தயாராக இருக்கிறேன்.
என் இத்தனை வருட வாழ்க்கையில் நான் வரைந்த ஓவியங்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க அனைவருக்கும் நன்றி” என்றார் .

சூர்யா பேசும்போது “மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீட்டில் இருக்கும் போது அவர்கள் மதிப்பு தெரியாது என்று சொல்வார்கள்.

என் அப்பாவை மற்றவர்கள் மதித்துக் கொண்டாடும் போதுதான், அவருடைய மதிப்பு எனக்குத் தெரிகிறது.
என்றைக்குமே அவர் ‘நான் இவ்வளவு சாதித்துவிட்டேன்’ என்று தன்னுடைய எண்ணங்களை எங்கள் மீது திணித்ததுகிடையாது. அவர் அன்றாடம் நடந்துகாட்டுகின்ற விதம் தான் எங்களை வழிநடத்தி வருகிறது.
அப்பா வரைந்த ஓவியங்களை பார்க்கும் போது, கஷ்டப்பட்டு ஓவியக் கல்லூரியில் படித்த அந்த ஏழை மாணவனின் வெறித்தனம் தான் தெரிகிறது.
அப்பா எப்போதுமே, எந்த விஷயத்தையுமே எளிதாக எடுத்துக் கொண்டதில்லை. அந்த காலத்தில் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து சாதித்தார்.

ஒரு ஓவியனாக, நடிகனாக, பேச்சாளராக குடும்பத் தலைவனாக சாதித்துக் காட்டியிருக்கிறார். எப்போதுமே அவர் பணத்துக்கும், புகழுக்கும் அடிமையானதே இல்லை.
சினிமாவில் நன்றாக இருந்த காலகட்டத்திலேயே, சினிமாவை தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த மனநிலை வேறு யாருக்கும் வருமா என்பது சந்தேகம்தான்.
நாள் தோறும் புதுப்புது விஷயங்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுவார். அந்த விஷயத்தில் அப்பாவை நாங்கள் மிஞ்ச வேண்டும்.

அல்லது அவருக்கும் சமமாக நடக்க வேண்டும் என நானும், கார்த்தியும் போட்டியிட்டு கொண்டு இருக்கிறோம்.
சினிமாவில் இந்த இடத்தை நாங்கள் அடைந்திருந்தாலும், சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை.

அப்பாவைப் பார்த்து பல விஷயங்களில் வியந்திருக்கிறேன். அதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அவருக்கு 500க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அனைவருடனும் நல்ல நட்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அதனைப் பார்த்து பிரமிப்பாக இருக்கிறது. பொறாமையாகவும் இருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் என்பதைத் தாண்டி இன்னும் பல அரிதான விஷயங்களை செய்து சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் ” என்றார் .
நிகழ்ச்சியில் மக்கள் குரல் ராம்ஜி, சுதாங்கன், மாலதி ரங்கராஜன் , தேவி மணி, பயில்வான் ரங்கநாதன் போன்ற பத்திரிகையாளர்களும் , நடிகர் மோகன்ராமும் சிவகுமாரை வாழ்த்திப் பேசி , நூலை வெளியிட்டனர்.

Leave a Reply