
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.
இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் கதாநாயகிகளாக நடிப்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டு வந்துள்ள நிலையில் இப்படத்தில் நடிகை ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது. இதுவரை பேச்சுவார்த்தை நடத்திவந்த ரகுமான், தற்போது ஓகே சொல்லிவிட்டாராம். எனினும் இதுதொடர்பான அக்ரிமெண்ட்டில் அவர் கையெழுத்திடவில்லை. இந்த சம்ப்ரதாயம் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.