எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநரும் எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நாவலின் வெளியீடு மற்றும் அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் எழுத்தாளர் நக்கீரன் கோபால், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
‘ஜூனியர் விகடன்’ வார இதழில் ஐம்பது வாரங்களுக்கு மேலாக தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ‘சங்காரம்’ தற்போது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. டெல்டா பகுதியை மையமாகக் கொண்டு குற்றம், அரசியல், காவல்துற...








