திரில்லர் உலகிற்கு மீண்டும் இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன் – புதிய விசாரணை கதைக்கு பூஜையுடன் துவக்கம்!
திரில்லர் உலகிற்கு மீண்டும் இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன் – புதிய விசாரணை கதைக்கு பூஜையுடன் துவக்கம்!
‘இறுதிப்பக்கம்’ மூலம் தரமான மர்டர் மிஸ்டரி கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன், தற்போது புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்துடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். Insomniac’s Dream Creations நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இந்த புதிய படம், சமீபத்தில் நடைபெற்ற பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.
‘இறுதிப்பக்கம்’, ‘டியர் ரதி’ போன்ற கவனிக்கத்தக்க படங்களைத் தொடர்ந்து உருவாகும் இந்த திரைப்படம், வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட கதை அமைப்பைக் கொண்டதாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு புதிய கோணத்தில் விசாரணை திரில்லராக இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ...









