Friday, March 29
Shadow

Latest News

விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் மட்டும் ஜோடியில்லை; 2 ஹீரோயின்களாம்!

விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் மட்டும் ஜோடியில்லை; 2 ஹீரோயின்களாம்!

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் ஒரு பாடல் காட்சியை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் விஜய் ஜோடியாக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. யோகி பாபு மற்றும் பிரேம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில், கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகிறது. துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருக...
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லறேன் படத்தின் ரகசியங்களை சொன்ன படக்குழு

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லறேன் படத்தின் ரகசியங்களை சொன்ன படக்குழு

Latest News, Top Highlights
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எனக்கு பலவீனங்களை கடந்து வருவதற்கு எழுத்தும், பாடல்களும் கிரியா ஊக்கியாக அமைந்தன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் நல்ல நட்பு அமைந்தது. அப்படி அமைந்த நட்பு தான் இந்த படத்தில் என்னை கொண்டு வந்து சேர்த்தது. அந்த நட்பு பாடலில் பிரதிபலிக்கும். சமூக கோபங்களை பாடல்களில் ஆங்காங்கே தூவிய...
ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார்.

ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார்.

Latest News, Top Highlights
ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்ஞாசாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். "தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறியுள்ளார்.ராணி அவர்கள் ஹிச்சி திரைப்படம் சமூக பாகுபாடு, சமூக பழக்கவழக்கம் போன்ற கருத்துக்கள் தரும் என்று...
பிரபல பாடகர் சிலோன் மனோகர் காலமானார்

பிரபல பாடகர் சிலோன் மனோகர் காலமானார்

Latest News, Top Highlights
இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் நேற்று (22.01.2018) அவர் காலமானார். இலங்கையின் பாப் மாஸ்ட்ரோ என அவர் அழைக்கப்பட்டார். இலங்கையில் பாரம்பரிய இசையான 'பெய்லா' (Baila) எனப்படும் இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து புதுவித இசை படைத்து பிரபலமானார். சுராங்கனி.. சுராங்கனி எனும் பாடலைப் பாடியதன் மூலம் அவர் இசை உலகில் பிரபலமானார். அந்தப் பாடலை அவர் இந்தி உட்பட 8 மொழிகளில் பின்னர் பாடினார். கொங்கனி மொழியில் பாடப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார். சிம்பு நடித்த ‘தொட்டி ஜெயா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்....
பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்

பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்

Latest News, Top Highlights
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் 25 சதவீதத்தை அரசு பேருந்து கட்டணத்துக்கு செலவிடும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்த பேருந்து கட்டண உயர்வால் மேலும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், "விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்து கட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்....
அரை நிர்வாண போஸ் கொடுத்து திரை உலகை அதிர்ச்சி  உண்டாக்கின அதிதி ராவ்

அரை நிர்வாண போஸ் கொடுத்து திரை உலகை அதிர்ச்சி உண்டாக்கின அதிதி ராவ்

Latest News, Top Highlights
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ். சமீபத்தில் ஹிந்தி திரைஉலகில் மிக பெரிய அளவில் ஜொலிக்கும் நாயகி என்று சொல்லலாம். இவர் தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக மணிரத்தினத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அனால் இப்படம் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தென் இந்திய பெண்ணான இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர் இந்நிலையில் அதிதி சமீபத்தில் மேலாடை இன்றி அரை நிர்வாணாமாக ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இவை தான் தற்போது வைரலாக பரவி வருகின்றது. ...
சிவகார்த்திகேயனுக்கு எதிராக புதுமுகத்தை களம்  இறக்கும் தனுஷ்

சிவகார்த்திகேயனுக்கு எதிராக புதுமுகத்தை களம் இறக்கும் தனுஷ்

Latest News, Top Highlights
தனுஷ் சிவகார்த்திகேயனை தம்பி தம்பி என்று சொல்லி பாசமாக இருந்தார். சிவகார்த்திகேயனை கோலிவுட்டில் வளர்த்துவிட்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தனுஷ் ஒரு செயலை செய்துள்ளார். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் தீனாவை தான் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். இந்நிலையில் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் அவர். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தான் தீனா ஹீரோவாக நடிக்கிறார். சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டு அழகு பார்த்தார் தனுஷ். அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோ...
‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். 'கிளாப்போர்டு' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'. நடிகர் - தயாரிப்பாளர் வி சத்யமூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்...
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இருந்ததால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம் – இயக்குநர் மிஷ்கின் பேச்சு

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இருந்ததால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம் – இயக்குநர் மிஷ்கின் பேச்சு

Latest News, Top Highlights
சவரகத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் சவரகத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா , இயக்குநர் மிஷ்கின் , கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட கலந்து கொண்டனர். இயக்குநர் மிஷ்கின் பேசியது :- நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது. நான் சென்ற பிறகு ஐம்பது வருடம் கழ...
இசையமைப்பாளர் இம்மானின் நூறாவது படத்தின் இசைக்கு நன்றி கூறிய இம்மான்

இசையமைப்பாளர் இம்மானின் நூறாவது படத்தின் இசைக்கு நன்றி கூறிய இம்மான்

Latest News, Top Highlights
காதலே சுவாசம் படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் இமான் இன்று அவரின் நூறாவது படத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார் . இன்று பல இசையைப்பளர்கள் நாள் தோறும் வந்தாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இசையமைப்பளார் என்ற பெருமையை தேடி கொண்டவர் காரணம் இவரின் மெட்டுகள் தயாரிப்பாளர்களுக்கு துட்டு என்று தான் சொல்லணும் ஒரு காலத்தில் இசை தட்டுக்கு என்று ஒரு மார்கெட் இருந்தது அது தயாரிப்பளர்கள் சுமையை குறைக்கும் ஆனால் இன்று இசைக்கு மார்கெட் இல்லை இசை வெளியிட தயாரிப்பாளர்கள் பணம் செலவு செய்யும் காலம் இது ஆனால் தயாரிப்பளர் நலன் கருதி குறைந்த செலவில் நிறைந்த பாடல்கள் கொடுப்பவர் இம்மான் இதனாலே எல்லா தயாரிப்பாளரும் இவரை தேடி ஓடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவரின் இசையில் வரும் பாடல்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைகிறது அதோடு விநியோகிஸ்தர்கள் இவரின் இசை என்றால் நம்...