Sunday, June 4
Shadow

Latest News

‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்- விஜய் சேதுபதி

‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்- விஜய் சேதுபதி

Latest News
கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று செனனியில் நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பாடல்கள் குறுந்தகடை வெளியிட இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில், “இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே பதற்றமாக இருக்கிறது. இந்த இடம் நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி, போன வெள்ளிக்கிழமை ஒரு படம் 'ஆண்டவன் கட்டளை' வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம் நேரம் அப்படி அமைந்தது தானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் ...
டோக்கியோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் தேர்வாகியிருக்கும் “இறுதிச்சுற்று”

டோக்கியோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் தேர்வாகியிருக்கும் “இறுதிச்சுற்று”

Latest News
கடந்த வருடம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியடைந்த இறுதிச்சுற்று இதில் மாதவன், ரித்திகா சிங், காளி வெங்கட் ராதாரவி, நாசர், மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ்மி நாராயணன்க இசையில் சுதா கொங்கோரா இயக்கதி வெளிவந்த பெரிய வெற்றி படம் மட்டும் இல்லாமல் அதிகமாக மக்களை கவர்ந்த படம் என்று தான் சொல்லணும். இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியானது அனால் இந்த படம் தமிழில் அடைந்த வெற்றி ஹிந்தியில் கிடைக்கவில்லை காரணம் இந்த படத்தின் இயக்குனர் தமிழ் பெண் என்பதால் இந்த படத்துக்கு பெரிய ஆதரவு கொடுக்கவில்லை அதுவும் ஒரு பெண் இயக்குனர் என்றும் பாராமல் கெடுத்தனர் அனால் திறமை என்றும் வீண் போகாது என்பதுக்கு சாட்சியாக இந்த படம் இன்று ஜப்பானில் நடைபெற இருக்கும் டோக்கியோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது .இதுவே இந்த படத்துக்கு கிடைத்த மிக பெரிய அங்கிகாரம் என்று சொல்லவேண்டும் ...
தனுஷ், கதை திரைகதை வசனம்மற்றும் தயாரிப்பில் இயக்கம்- சௌந்தர்யா

தனுஷ், கதை திரைகதை வசனம்மற்றும் தயாரிப்பில் இயக்கம்- சௌந்தர்யா

Latest News
கடந்த வாரம் இணையதளங்கள் முதல் எல்லா ஊடகங்களில் மாட்டி சிக்கி தவித்தவர் சௌந்தர்யா தனது சொந்த வாழ்க்கை மட்டும் இல்லாமல் பொது வாழ்கையிலும் சிக்கி தவித்தவர் என்றால் அது சௌந்தர்யா இவை அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைத்தார் சௌந்தர்யா. கோச்சடையானை தொடர்ந்து இன்னொரு படம் இயக்கும் வேலையை தொடங்கிவிட்டார் செளந்தர்யா. இந்த முறை அவர் கையில் எடுத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை எழுதியவர்...தனுஷ்.! பவர் பாண்டி மூலம் இயக்குநராகும் தனுஷ், தனது இன்னொரு ஸ்க்ரிப்ட்டை செளந்தர்யாவுக்கு தந்ததோடு மட்டுமில்லாமல், படத்தை வுண்டர்பார் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். ஏற்கனவே தனுஷை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை சொல்லியிருந்தார் செளந்தர்யா. இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பதை தெரிந்துக் கொள்ள கொஞ்சம் காத்திருக்க வேண்டும். படத்துக்கு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்களாம். அதிகாரப...
நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை!-  சௌந்தரராஜா

நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை!- சௌந்தரராஜா

Latest News
தர்மதுரை” படத்தில் விஜயசேதுபதியின் தம்பியாகவும், “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தில், யங் டிராபிக் ராமசாமியாகவும்… அனைவராலும்பாராட்டப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், நடிகர் சௌந்தரராஜா. “கத்திச்சண்டை” படத்தில் விஷாலின் நண்பனாகவும், “கள்ளன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், “ஒரு கனவு போல” படத்தில் கதைநாயகர்களில்ஒருவராகவும் நடித்துள்ளார் சௌந்தரராஜா. அடுத்தடுத்து படங்கள் வெளியாவது ஒரு பக்கம் இருக்க, ஹீரோவாக நடிக்க கதைகள் வந்துகொண்டிருப்பதில் மிகஉற்சாகமாக இருக்கிறார். ஆனால், ஒரு கனவு போல படத்திலும் மற்றும் “கள்ளன்” படத்திலும் சௌந்தரராஜாவின் கேரக்டர் பற்றி கசிந்துள்ள தகவல்கள் அவரைபரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. அது பற்றி சௌந்தரராஜாவிடம் கேட்டபோது, “ஒரு கனவு போல” படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜாசார், பாக்கியராஜ் சார...
கொடி கொண்டாட்டத்துக்கு தயாராகும் தனுஷ் ரசிகர்கள்

கொடி கொண்டாட்டத்துக்கு தயாராகும் தனுஷ் ரசிகர்கள்

Latest News
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படம் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் உற்சாகத்தில் காணப்படுகிறார் தனுஷ். இந்த நிலையில், துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலாக அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள கொடி படமும் ரிலீசு க்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் தனுசுடன் திரிஷா, அனுபமா உள்பட பலர் நடித்துள்ளனர். அரசியல் பின்னணி கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரித்து நடித்துள்ள தனுஷ், செப்டம்பர் 28-ந்தேதி கொடி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக டுவிட் செய்திருப்பவர், படம் தீபாவளிக்கு வெளியாகயிருப்பதையும் உறுதி செய்துள்ளார்....
கயல் சந்திரன்- சாட்னா டைட்டஸ் நடிக்கும் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”

கயல் சந்திரன்- சாட்னா டைட்டஸ் நடிக்கும் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”

Latest News
பிரபல விளையாட்டையும், திரைப்படத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. சமீபத்தில் இந்த படக்குழுவினர் தங்கள் படத்தின் மிக முக்கிய காட்சியை திட்டம் போட்டு மிக பிரம்மாண்ட முறையில் படமாக்கி இருக்கின்றனர்...இந்த காட்சிக்காக கதாநாயகன் கயல் சந்திரன், கதாநாயகி சாட்னா டைட்டஸ் ஆகியோருடன் இணைந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான நடிகர்கள் பங்கேற்று நடித்திருப்பது வெகு சிறப்பு. எந்தவித இடைவேளையும் இன்றி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பானது பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள சிறந்த கிரிக்கெட் மைதானத்தை போலவே, இந்த மாதிரி மைதான அரங்கம் உருவாக்கப்பட்டிருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் அதிகரித்து இருக்கிறது. "ஒரு காட்சிக்கு தேவையான இ...
இரண்டு நாளில் வசூலில் சாதனை படைத்த ஆண்டவன் கட்டளை

இரண்டு நாளில் வசூலில் சாதனை படைத்த ஆண்டவன் கட்டளை

Latest News
‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் நேற்று முன் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் ஒரே நாளில்ரூ . 73 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 5 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது ...
திரையரங்கத்தின் திரையை வீணாக்கிய தனுஷ் ரசிகர்கள்

திரையரங்கத்தின் திரையை வீணாக்கிய தனுஷ் ரசிகர்கள்

Latest News
கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று நடிகர்கள் கேட்டுக் கொண்டபோதும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. தங்களது அபிமான ஹீரோக்களின் படங்கள் தியேட்டர்களுக்கு வரும்போது சந்தோசத்தை வெளிப்படுத்த கட்அவுட், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபகாலமாக தனுஷின் ரசிகர்கள் அவரது படங்களில் ஆடியோ விழாக்களுக்கு படையெடுத்து, அவர் பேசும்போது பலத்த கரகோஷம் எழுப்பி வருபவர்கள், அவரது படங்கள் ரிலீசாகும்போதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் விமரிசையாக தொடரி படத்தின் ரிலீசை கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள், திரையில் தனுஷ் தோன்றும் ஓப்பனிங் காட்சிகளின்போது உணர்ச்சி பெருக்கில் ஆட்டம் போட்டவர்கள், திரையில் தோன்றும்...
அஜித் கோவத்துக்கு ஆளான  வெங்கட் பிரபு

அஜித் கோவத்துக்கு ஆளான வெங்கட் பிரபு

Latest News
தானா வர்ற ஸ்ரீதேவியை தள்ளிக்கோ தள்ளிக்கோ என்றால் இதுதான் கதி போலும்! மங்காத்தா வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த சில வாரங்களிலேயே வெங்கட் பிரபுவை அழைத்த அஜீத், “மீண்டும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம். ஆக வேண்டிய வேலைய பாருங்க” என்று கூற, “கையில உங்களுக்கு ஏற்ற கதையே இல்லையே சார்” என்று கூறிவிட்டார் வெங்கட் பிரபு. அதற்கப்புறம் அவர் தமிழ்சினிமாவில் வேறு வேறு படங்களால் சிக்கி சீரழிந்தது தனிக்கதை. பனம்பழத்துக்கு எதுக்கு பவுடர் என்று நினைத்தவர், தனது ஆஸ்தான சிறுவர்களுடன் சென்னை 28 படத்தின் பார்ட் 2வை எடுக்க கிளம்பிவிட்டார். படம் நல்லா வந்திருக்கு… படம் நல்லா வந்திருக்கு… என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கூறி வந்தாலும், அந்த படத்தின் டீஸரையோ, ட்ரெய்லரையோ அஜீத்திடம் போட்டுக் காட்ட ஆன மட்டும் தண்ணி குடித்துவிட்டாராம். அப்புறம்… பிறகு… பார்க்கலாம் என்ற பதில்தான் வந்தது அவ்விடத்திலிருந்து. அஜீத்தும் வெளி...
விஜய்.. ரஜினி வரிசையில் விக்ரம் இருமுகன் வசூல் சாதனையில்

விஜய்.. ரஜினி வரிசையில் விக்ரம் இருமுகன் வசூல் சாதனையில்

Latest News
ஒரு காலத்தில் குறைந்த அரங்கத்தில் தான் படம் ரிலீஸ் ஆகும் அப்படி ரிலீஸ் ஆகி படங்கள் நூறு நாள் என்று போஸ்டர் அடிப்பார்கள் அடுத்து வெள்ளி விழாவை நோக்கி என்று எல்லாம் பார்ப்போம் அனால் இப்ப அப்படியே மாறிவிட்டது குறைந்த நாளில் எவ்வளவு வசூல் என்பதுதான் வடத்தின் வெற்றியை குறிக்கிறது அந்த வகையில் விக்ரம் இருமுகன் வசூலில் சாதனை புரிந்துள்ளது விக்ரம் நடிப்பில் கடந்த 8 ஆம் தேதி வெளியான ‘இருமுகன்’ படம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 425 திரையரங்குகளில் வெளியான இப்படம் 4 நாட்களிலேயே ரூ. 50 கோடி வசூல் செய்து ஆச்சரியத்தை கொடுத்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இருமுகனுக்கு போட்டியாக வேறு எந்த படங்களும் இல்லை என்பதால் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இதனால் இரண்டே வாரங்களில் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக இருமுகன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்...