விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் – சுட்டுப்பிடிக்க உத்தரவு
வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மிஷ்கின், சுசீந்திரனை இணையும் படத்திற்கு சுட்டுப்பிடிக்க உத்தரவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று புதிர் வைத்த நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி சுட்டுப் பிடிக்க உத்தரவு என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். ...