
பிக் பாஸ் பிரபலங்களுக்கு நடந்த விபரிதம்
முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வாவேற்பு பெற்றதோடு, அதில் பங்கேற்ற பலரை மக்களிடம் பெரும் பிரபலமாக்கியது. இதில், ஏற்கனவே மக்களுக்கு தெரிந்த முகங்கள் சிலர் கலந்துக் கொண்டாலும், ஓரளவே தெரிந்த, யார் என்பதே தெரியாதே, சிலரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் எளிமையாக சென்றடைந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் போட்டியாளர்கள் பங்கேற்றாலும், அந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்கு கிடைத்திருக்கும் பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு பல விதத்தில் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
சினிமா வாய்ப்பு, விளம்பர பட வாய்ப்பு, கடை திறப்பு என்று ரொம்ப பிஸியாக இருக்கும் பிக் பாஸ் பிரபலங்கள், தனி தனியாக தங்களது சேவையை செய்துக் கொண்டிருக்க, தனியார் நிறுவனம் ஒன்று அவர்களை மொத்தமாக வளைத்திருக்கிறது.
ஓவியா, ஜுலி, சினேகன், ரைஸா, சுஜா வ...