
தனுஷ் சிவகார்த்திகேயனை தம்பி தம்பி என்று சொல்லி பாசமாக இருந்தார். சிவகார்த்திகேயனை கோலிவுட்டில் வளர்த்துவிட்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் தனுஷ் ஒரு செயலை செய்துள்ளார்.
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் தீனாவை தான் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். இந்நிலையில் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் அவர்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தான் தீனா ஹீரோவாக நடிக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டு அழகு பார்த்தார் தனுஷ். அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார்
சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஆவார். இந்நிலையில் தனுஷ் தீனாவை ஹீரோவாக்கியிருப்பது அடுத்த சிவாவை உருவாக்கவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சின்னத்திரையில் இருந்து வந்த சந்தானம் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ஹீரோவாகிவிட்டார். இந்நிலையில் மேலும் ஒரு சின்னத்திரை பிரபலம் ஹீரோவாகியுள்ளார்
