
தமிழ் சினிமாவில் கமலுக்கு பிறகு ஒரு சகலகலாவல்லவன் என்றால் அது தனுஷ் என்று சொல்லலாம் பாடலாசிரியர் பாடகர் கதை தயாரிப்பு நடிகர் அதுவும் உலக அளவில் ஹிந்தி ஹாலிவுட் என பன் முகங்களை கொண்டவர் இதுவரை இயக்குனர் அவதாரம் எடுக்காமல் இருந்த தனுஷ் இப்ப அதையும் விட்டு வைக்கவில்லை.
நடிகர் தனுஷ் தற்போது வடசென்னை படத்தில் பிஸியாக நடித்துவருகிறர்.தற்போது இவர் ஒரு புது படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார்.
ராஜ்கிரண் நடிக்கும் இப்படத்தில் பிரசன்னாவும் நடிக்க இருக்கிறாராம்.
தற்போது இந்த படத்திற்கு பவர்பாண்டி என்று பெயரிட்டுள்ளனர். திரைப்படத்துக்கு இசை ஷான் ரோல்டன்
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா சினிமாவில் கால் பாதிக்க போராடிய போது உதவியவர் ராஜ்கிரண் என்பது குறிப்பிடத்தக்கது
இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே துவங்கியது