Tuesday, May 20
Shadow

பிரபுதேவாவை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் சுபாஷ் மரணம்

தமிழில் சத்ரியன், பிரம்மா, நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் சுபாஷ். தமிழ் சினிமாவில் ஹீரோக்களை காமெடி செய்யவைத்தவர் என்றும் சொல்லலாம் பிரபுதேவாவை வைத்து அதிக படங்கள் இயக்கியவரும் இவரே ஏன் இயக்குனர் சுபஷ்க்கு மிகவும் பிடித்த நெருங்கிய நண்பரும் பிரபுதேவா என்று சொல்லலாம்

இவர் இன்று சென்னை SRM மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 57. இவர் ‘தல’ அஜித்தை வைத்து ஆரம்பகாலத்தில் பவித்ரா எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இதுபோக சமீபத்தில் இவர் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே போன்ற படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply