
காதலே சுவாசம் படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் இமான் இன்று அவரின் நூறாவது படத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார் . இன்று பல இசையைப்பளர்கள் நாள் தோறும் வந்தாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இசையமைப்பளார் என்ற பெருமையை தேடி கொண்டவர் காரணம் இவரின் மெட்டுகள் தயாரிப்பாளர்களுக்கு துட்டு என்று தான் சொல்லணும்
ஒரு காலத்தில் இசை தட்டுக்கு என்று ஒரு மார்கெட் இருந்தது அது தயாரிப்பளர்கள் சுமையை குறைக்கும் ஆனால் இன்று இசைக்கு மார்கெட் இல்லை இசை வெளியிட தயாரிப்பாளர்கள் பணம் செலவு செய்யும் காலம் இது ஆனால் தயாரிப்பளர் நலன் கருதி குறைந்த செலவில் நிறைந்த பாடல்கள் கொடுப்பவர் இம்மான் இதனாலே எல்லா தயாரிப்பாளரும் இவரை தேடி ஓடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவரின் இசையில் வரும் பாடல்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைகிறது அதோடு விநியோகிஸ்தர்கள் இவரின் இசை என்றால் நம்பி வாங்குகிறார்கள் என்பது எழும் சிறப்பு
இதனால் தான் மிக விரைவில் இவர் நூறு படங்களுக்கு இசை அமைத்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் அதோடு தன் முதல் வாய்ப்பை இன்றும் நினைவுகூர்ந்து பேசியது மேலும் சிறப்பு அதோடு தமிழ் சினிமாவின் மாபெரும் மனிதர் தயாரிப்பாளரும் ஆனா திரு ஜி.வி. அவர்களுடன் பணிபுரிந்த விஷயங்களையும் நன்றியோடு நினைத்து கூறியது மிகவும் பாராட்டவேண்டிய விஷயம்