சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவான நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தான் தொடங்கியது. இருந்தும் ரசிகர்களும் நட் சித்திரங்களும் மிகவும் பொறுமையாக கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கு மிகவும் எதிர்பார்த்த ரஜினிகாந்த் ஆப்சென்ட்.
இந்த இரண்டாம் பாகத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்று அந்த பாடல்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டன. மேலும் படத்தின் டிரைலரும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
*எழுத்தாளர் ஜெயமோகன் பேசியபோது,*
முதல் படம் என்பது தொடக்கம் தான். இரண்டாம் பாகம் என்பதே முழுமையானது.
மகிழ்ச்சியான எதிர் பார்ப்பு நிறைந்த நாளாக இருக்கிறது.முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் ஒரு விஷயம் பற்றி சொன்னேன் ராஜராஜ சோழன் பற்றி உலகமே பேசும் என்று.
முதல் படம் வெளியான 45 நாட்களுக்கு பிறகு ஷாங்கோ சென்று இருந்தேன். அங்கு படம் வெளியான மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து ஹவுஸ் ஃபுல்லாக இருந்திருக்கிறது. அங்கு படம் பார்த்த அதிகம் அந்த ஊர் வெளிநாட்டவர்களே.
*நடிகை குஷ்பூ பேசியபோது,*
என்னுடைய ஃபேவரைட் படம் எது என்று கேட்டாலே நான் சொல்வது மௌன ராகம் படம் தான். தமிழ் படங்களில் மணி ரத்னம் என்று சொன்னாலே அது தனி.
*நடிகை ரேவதி பேசியபோது,*
லட்சக்கணக்கான மக்கள் படித்த புத்தகம் தற்போது 40 வருடங்கள் கழித்து திரைப்படமாக வந்துள்ளது.
நான் பார்த்த மணி ரத்னம் வேறு.ஒருவர் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.தமிழ் மண்ணில் இருந்து உலகத்திற்கே அளித்துள்ளார் மணிரத்னம்.இந்த படத்தில் நடக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் இருக்கும்.
*நடிகை சுஹாசினி பேசியபோது*
மணிரத்னம் எப்போதும் ரோமெண்டிக் நிறைந்தவர். அவர் படத்தில் இருக்கும் நாயகிகளுக்கே அவ்வளவு காதல் இருக்கு என்றால், அவருடைய நிரந்தர நாயகி என்மீது எவ்வளவு காதல் இருக்கும்.
எனக்கு மணிரத்னம் படங்களில் மிகவும் பிடித்த திரைப்படம் நாயகன் தான்.
*அமைச்சர் துரைமுருகன் பேசியபோது,*
ஒரு வரலாற்றுக் கதையை படமாக்கி இன்று வெளியிட்டுள்ளனர்.
நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இந்த கதையை 5 முறை படித்திருக்கிறேன்.
லைகா சுபாஸ்கரன் என்னிடம் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க போகிறேன் என்று சொன்னார். நான் அந்த கதையை படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன் அவர் இல்லை என்றார். அதனால் நான் அந்த படத்தை எடுக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நான் எடுத்தே தீருவேன் என்றார்.
கதைகளை படமாக்குவது எளிது, காவியங்களை படமாக்குவது கடினம்.
வரலாற்று படங்களை எடுக்க மணிரத்னம் ஒத்துவர மாட்டார் என்று சொல்லி அரை மனதோடு சம்மதித்தேன்.
கல்கி எந்த ஒரு கதாபாத்திரத்தையும் இது தான் என்று விலக்கியிருக்கமாட்டார். இந்த கதாபாத்திரங்களிலே எனக்கு மிகவும் பிடித்தது வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான்.எனக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்ததற்கு இன்னொரு காரணம் வந்தியத்தேவன் கதாபாத்திரம் என் தொகுதியை சார்ந்தவர்.
கலைஞர் கலைஞானி என்ற பெயரை கமல்ஹாசனுக்கு சூட்டினார்.அதனால் தான் அவர் திரைத்துறையில் சிறந்து விளங்குகிறார்.அவருக்கு நிகர் அவரே.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இரட்டிப்பு விதத்தில் ஓடும்.
*நடிகர் கமல்ஹாசன் பேசியபோது*
இதே மாதிரியான அன்போடு எங்களை இத்தனை வருடங்களாக தாங்கி பிடிப்பதற்கு நன்றி.
பல திரைப்படங்களை எடுக்கிறோம் ஒரு சில திரைப்படங்கள் நழுவி போகின்றன இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் போல். ஆனால் இதிலும் பின்னணி குரலாக வந்துவிட்டேன்.எதையும் விடுவதில்லை
பாரதிராஜா மேடையில் பேசும்போது அலங்காரமாக பேசினார், ஆனால் தனியாக இருக்கும்போது ஒருமையில் பேசுவார் அது இன்னும் அழகாக இருக்கும்.
நாயகனுக்கு முன்பாக எனக்கும் மணிரத்னத்திற்கும் ஆன பந்தம் இப்போது வரை நீடிக்கிறது.
ஏ. ஆர்.ரஹ்மானால் எனக்கு மிக பெரிய வாய்ப்பு கிடைத்தது. துபாயில் ரஹ்மானின் கலைக்கூடத்தில் இசை நிகழ்ச்சி காண்பித்தார்கள், அங்கு பேச முடியாமலே திரும்பி வந்துவிட்டேன். காரணம் இப்படி ஒரு கலைஞர்களா என்று.
பொன்னியின் செல்வன் திரைப்படம் காதலா வீரமா என்று கேட்டார்கள். காதலும் வீரமும் கொண்டது தான். காரணம் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் கதை மீது கொண்ட காதல். தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இந்த படத்தை எடுக்க துணிச்சலுடன் வந்தது வீரம். ஆக இரண்டும் சேர்ந்தது தான் பொன்னியின் செல்வன்.
நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் தான் ஒரு உலக அழகி என்று நிரூபித்துள்ளார்.
*இது சோழருக்கு மட்டுமில்லை பொற்காலம், இது தமிழ் சினிமாவிற்கான பொற்காலம்*
துரைமுருகன் சொன்னதை போல் இரட்டிப்பு வெற்றி பெற வேண்டும் என்பது வெரும் வாழ்த்து இல்லை, ஆசை.
பொன்னியின் செல்வன் கதை எனக்கு புரிந்தது போல் சாதாரண ரசிகர்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. விக்ரம் மருதநாயகம் படத்திலிருந்து என்னுடன் இருக்கிறார்.
*நடிகர் சரத்குமார் பேசியபோது,*
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறோம் என்று சொன்னபோது அவர் திட்டிவிடுவார் என்று நினைத்தேன். முதல் காட்சியே ஐஸ்வர்யா ராய் உடன் தான். எனக்கு காதல் என்றாலே வராது.
வீட்டில் எனக்கு 6 பேர் உடையை கழற்றினாள் நன்றாக இருக்கும் ஆனால் அதை படத்தில் வைத்ததற்கு நன்றி.
நான் காதல் செய்து இரண்டு முறை திருமணம் செய்தேன் என்னைப்பார்த்து ரொமேன்ஸ் வராதா என்று கேட்டார். முதலில் காதல் திருமணம் இரண்டாவது காதல் திருமணம். இன்றைக்கும் பலப்பேர் என்னை காதலிப்பதாக சொல்கிறார்கள்.
ஐஸ்வர்யாவின் கழுத்தை திருப்பும் பாக்கியம் எனக்கு மட்டுமே. உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை எனக்காக வைத்ததற்கு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி.
இந்த கதையை நீங்கள் 5 பாகங்களாக எடுத்து பெரிய பழுவேட்டரையர் அவர்களின் காதலை பற்றி சொல்ல வேண்டும். 64 விலுப்பொண்கள் பெற்றதை போல் 64 பெண்களை காதலித்தாரா என்று நீங்கள் படம் எடுத்தால் நிச்சயம் அதில் நடிப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.அதை ஸ்விட்சர்லாந்தில் எடுப்போம்.
*நடிகர் பார்த்திபன் பேசியபோது,*
ராகுல்காந்தியின் இரண்டு வருட சிறை தண்டனை பற்றி அன்றே கண்ணதாசன் எழுதியுள்ளதாக வந்திருந்தது, அதை என்னவென்று திறந்து பார்த்தால் “இன்று எவரும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு” என்று அன்றே எழுதியுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
*இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியபோது,*
எனக்கு மணிரத்னம் 31 வருடங்களாக வேலை கொடுத்து வருகிறார். சில நேரம் அவரை பற்றி பேசும்போது எப்போது கம் பேக் தரப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். என்னை 3 வருடங்களுக்கு ஒருமுறை அப்படி கேட்பார்கள்.அவர் வைத்த படியில் நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம்.
*நடிகர் சிலம்பரசன் பேசியபோது,*
வீட்டில் பசங்க எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார்கள். பெரியவர்கள் வந்ததும் அமைதியாகிவிடுவார்கள்.
நான் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோது எனக்காக படம் கொடுத்தவர் மணிரத்னம்.
நான் படப்பிடிப்பிற்கு சரியாக காலை 6 மணிக்கு போகிறேன் என்றால் அதற்கு காரணம் மணிரத்னம் தான்.
சுபாஸ்கரன் நல்ல மனிதர். ஏஆர் ரகுமான் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. பத்து தல படம் நேற்றுதான் பார்த்தேன். பிண்ணியெடுத்துவிட்டார். அவர் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறார்.
விக்ரம் தங்கலான் படத்தில் சூப்பராக பண்ணியிருக்கிறார். மற்றவர்கள் கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது. இன்னும் இரண்டு பாகங்கள் எடுங்கள் நான் பார்ப்பேன். நாளைக்கு பத்து தல ரிலீஸ் என்பதால் பதற்றமாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். குந்தவையா நந்தினியா என்ற கேள்விக்கு இரண்டு கண்களில் எந்த கண்ணு என்று கேட்டால் எப்படி. எந்த கண்ணை மூடவேண்டும் என்று நான் பாத்துக்கறேன் என்றார்.
*நடிகர் ஜெயம் ரவி பேசியபோது,*
ரசிகர்களை நான் பிரித்து பார்த்து பேசவில்லை. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி.பொன்னியின் செல்வன் படம்பார்க்க தியேட்டருக்கு ஆக்ஷிஜன் சிலிண்டர் உடன் வந்தவர்களில் எல்லாம் நான் பார்த்தேன்.
ஒரு கதையை இரண்டு படமாக எடுத்து வைத்துவிட்டு முதலில் இதை பாருங்கள் பின்பு இதை காட்டுகிறேன் என்று சொன்னவர் தான் மணி ரத்னம்.
கார்த்தி இல்லையென்றால் இந்த இரண்டு பாகத்தில் என்னால் முழுமையாக நடித்திருக்க முடியாது.
தூரமாக இருந்து வாழ்த்தும் ரஜனி அவர்களுக்கு நன்றி, சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி
*நடிகர் கார்த்தி பேசியபோது,*
வெறும் ஆசையோடு வந்த என்னை எந்த கேள்வியும் கேட்காமல் சேர்த்துக் கொண்டார் மணிரத்னம்.
இதுவரை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாத ஊர்களின் தியேட்டர்களில் எல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது
நான் கைதி படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அவரிடம் இருந்து அழைப்பு வந்தது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாயா என்றார், நான் சிவாஜி கணேசன் வசனங்கள் எல்லாம் பேசி நடித்துக் காட்டினேன்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜனி கமல் பேசினார்கள் , அது இப்போது தான் புரிகிறது மணிரத்னம் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும்.
பையா திரைப்படத்திற்கு எனக்கு நிறைய காதல் கடிதங்கள் வந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் எனக்கு நிறைய மெசேஜ் வருகிறது.
*நடிகை திரிஷா பேசியபோது,*
இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு நிறைய பேர் எனக்கு குந்தவை கதாபாத்திரம் போன்று வேடமணிந்து அனுப்பினர், சிலருக்கு என்னால் நன்றி சொல்ல முடிந்தது.உயிர் எப்போதும் உங்களுடையது தான் என்று ரசிகர்களை பார்த்து கூறினார் நடிகை திரிஷா.
*நடிகர் விக்ரம் பேசியபோது,*
ஆதித்த கரிகாலனால் எப்படி நந்தினியை மறக்க முடியாதோ, அதேபோல் என்னால் இந்த படத்தில் நடித்ததை மறக்க முடியாது.ஆதித்த கரிகாலன் போன்ற கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு.
மணி ரத்னம் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன், அவர் இயக்கிய சினிமாவில் நானும் இருக்கிறேன். 4 முறை அவருடன் படம் நடித்திருக்கிறேன். இரண்டு முறை இராவணன், இரண்டு முறை பொன்னியின் செல்வன் படத்திற்காக.
*நடிகை ஐஸ்வர்யா ராய் பேசியபோது*
இங்கு வந்திருக்கும் ரசிகர்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி. முதல் நாள் கேமரா முன்னாள் நின்றது முதல் இன்று வரை நான் மணி ரத்னம் அவர்களின் மாணவியே.