
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்சமயம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.
இந்நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபுவின் நண்பனாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க RJ பாலாஜி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.