
தமிழ் சினிமாவில் தொடந்து மூன்று பகுதி கொண்டு வரும் ஒரே படம் சிங்கம் 3 தற்போது இந்த படத்துக்கு சி 3 என்று டைட்டில் வைத்துள்ளனர்.டைட்டில்யில் தான் சி 3என்ற மாற்றம் தவிர முதல் பகுதியின் தொடர்ச்சி தான் சி 3 படத்தி கதை இந்த மூன்று பாகம் சேர்த்து பார்த்தல் ஒரே படமாக தான் இருக்கும் தவிர வேற கதையை திணித்தது போல் இருக்காது என்று படத்தின் இயக்குனர் திட்டவட்டமாக கூறுகிறார்.
இந்த படத்தில் சூர்யா அனுஷ்கா நாசர் சுருதிஹாசன் சூரி ரோபோ சங்கர் மட்டும் பலர் நடிக்கிறார்கள். அதாவது இந்த படத்தில் மொத்தம் 40 பேர் நடிக்கிறார்கள். இத படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டு தற்போது இந்த படம் உறுதியாக வரும் 9ம் தேதி வெளியாகிறது என்பதை இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார். அது மட்டும் இல்லாமல் மேலும் ஒரு சுவரிசமான தகவலை கூறினார் ஞானவேல் ராஜா.
இந்த படத்தின் வியாபாரம் ரஜினி படத்துக்கு பிறகு ரிலீஸ் முன்பே 1௦௦ கோடி வியாபாரம் தாண்டி விட்டது ரஜினிக்கு பிறகு சூர்யா வியாபாரம் தான் தமிழ் மார்கெட்யில் மட்டும் இல்லை தெலுங்கு மார்கெட்டிலும் பெருசு இதை இதுவரை நாங்கள் வெளியில் சொன்னது இல்லை சூர்யா எங்களை சொல்லவும் விடவில்லை என்றும் கூறினார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் மிக பெரிய சாதனையாக இருக்கும் என்றும் கூறினார்.
படத்தை பற்றி இயக்குனர் ஹரி கூறும்போது இந்த படம் மக்களின் ரசனைக்கு எற்ப மிகவேகமாக அதேபோல் கதையின் ஓட்டத்தில் இருந்து கொஞ்சமும் விலகாமல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் நானும் சூர்யாவும் இணையும் 5 தாவது படம் இந்த ஐந்து படத்தில் நாங்கள் இருவரும் மிகவும் சகதோர பாசத்தோடு பழகிவருவதாலே இந்த தொடர் வெற்றியின் முக்கிய காரணம் . என்றும் கூறினார்.