
‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸுக்கு’ தேர்ந்தெடுக்க பட்டுள்ள இளம் இசையமைப்பாளர்கள் விஷால் – ஆதித்யா மற்றும் ஷங்கர் எஹசான்
சென்னையை சார்ந்த இளம் இசையமைப்பாளர்கள் விஷால் - ஆதித்யா மற்றும் ஷங்கர் எஹசான் ஆகியோர் 'குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸுக்கு' தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர் என்று கடந்த ஜூன் 8 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கூட்டணியானது தாங்கள் இசையமைத்த 'பலோபாஷா' பாடலுக்கு 'சோசியல் ஸ்டார்' என்னும் விருதை தட்டிச் சென்றுள்ளனர். சாய்சரண் மற்றும் வைஷாலி குரலில் உதயமாகி, மனித உணர்வுகளையும், அன்பு - அமைதி ஆகிய குணங்களையும் உள்ளடக்கி இருக்கும் இந்த 'பாலோபாஷா' பாடலானது தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது மேலும் சிறப்பு. இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் - ஆதித்யா கூட்டணி மட்டும் தான் இந்த 'குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்' (GPSA) விழாவில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
'குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்' (GPSA) பற்றி: ProjectPeac...