Sunday, December 7
Shadow

Tag: விஜய்

விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?

விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். வில்லன் வேடத்தில் பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். வரலட்சுமியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவமான வேடம் என்று கூறப்படுகிறது. முக்கிய திருப்புமுனை ஏற்படுத்தும் வில்லத்தனம் கலந்த பாத்திரமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்....
பிறந்தநாளில் வரலட்சுமியை குஷியில் ஆழ்த்திய விஜய் படக்குழு

பிறந்தநாளில் வரலட்சுமியை குஷியில் ஆழ்த்திய விஜய் படக்குழு

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும், ராதாரவியும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலட்சுமி பிறந்த நாளான இன்று விஜய் படத்தில் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பது, அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக அமைந்திருக்கிறது....
விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

Latest News, Top Highlights
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின. அப்போது அங்கு படமாக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இரைதயடுத்து படப்பிடிப்பில் யாரும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்று படக்குழுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அறிவுறுத்தியுள்ளாராம்....
ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி மகளிட...
ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா இந்த பிரபல இயக்குநர்?

ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா இந்த பிரபல இயக்குநர்?

Latest News, Top Highlights
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். அந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கினார். பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியாகிய இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்களை கடந்து புதிய மைல்கல்லையும் தொட்டது. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். விஜய்யுடன் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்திருந்தார்கள். இந்நிலையில், அட்லி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் பிரபாஸ் நடிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில், அடுத்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக...
விஜய்யை மாஸாக காட்ட களமிறங்கிய இரு பிரபலங்கள்

விஜய்யை மாஸாக காட்ட களமிறங்கிய இரு பிரபலங்கள்

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் விஜய்யின் தொடக்க பாடல் மற்றும் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் படக்குழுவுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் - ஏ.ஆ...
நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம் தான் நடிகை – யார் சொன்னா தெரியுமா?

நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம் தான் நடிகை – யார் சொன்னா தெரியுமா?

Latest News, Top Highlights
‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர். தற்போது இவரது நடிப்பில் ‘ஏமாலி’ என்ற படம் வெளியாகி உள்ளது. இதில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யுடன் நடிக்க ஆசையாக இருப்பதாக அதுல்யா ரவி கூறியிருக்கிறார். இது பற்றி அதுல்யா அளித்த பேட்டியில், “நான் முதலில் விஜய் ரசிகை. அதன் பிறகு தான் நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்று கூறியுள்ளார். வாய்ப்பு கிடைக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்....
கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியத்தை பாதுகாத்து வரும் விஜய்!

கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியத்தை பாதுகாத்து வரும் விஜய்!

Latest News, Top Highlights
கீர்த்தி சுரேஷ் வரைந்து கொடுத்த ஓவியத்தை, தன்னுடைய வீட்டில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளார் விஜய். விஜய்யின் பிறந்தநாளின்போது கடந்த வருடம் ஒரு ஓவியத்தைப் பரிசாகக் கொடுத்தார் கீர்த்தி சுரேஷ். இந்த ஓவியம், கீர்த்தி சுரேஷ் கைப்பட வரைந்தது. இந்த ஓவியத்தின் கீழே, ‘என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்… பல கோடி ரசிகைகளில் ஒருத்தி’ என தமிழில் எழுதிக் கொடுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த ஓவியத்தை, தன் வீட்டு வரவேற்பறையில் பத்திரமாக மாட்டி வைத்துள்ளார் விஜய். சமீபத்தில் தன் மகளின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக விஜய் வீட்டுக்குச் சென்றார் பார்த்திபன். அப்போது விஜய் மற்றும் ஷோபா சந்திரசேகருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த போட்டோவில், அவர்களின் பின்புறம் கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியம் மாட்டப்பட்டிருந்தது....
கத்தி படத்திற்கும், விஜய் 62 படத்திற்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

கத்தி படத்திற்கும், விஜய் 62 படத்திற்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கொல்கத்தா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு அனல் பறக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க ஏ.ஆர்.முருதாஸ் திட்டமிட்டிருக்கிறாராம். அங்கு சுமார் 1 மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். முன்னதாக கத்தி படத்தின் ஓபனிங் சீன் கொல்கத்தாவில் தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய்யின் ...
விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கியிருக்கிறது. அதன்படி விஜய்யின் அடுத்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் தான் விஜய் நடிக்கிறாராம். இதுகுறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்ததாகவும், விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜீவா கூறியிருக்கிறார். அந்த 100-வது படத்திற்கான கதைகள் கேட்கும் வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்...