வாழ்க்கைக்கு உதவாது என்று நாம் ஒதுக்கப்பட்ட நல்ல விஷயங்கள் பற்றி சொல்லும் படம் தான் “கில்லி பம்பரம் கோலி”
ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பாக D.மனோஹரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் கில்லி பம்பரம் கோலி.
நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான கில்லி பம்பரம் கோலி ஆகியவற்றின் பெருமையை பறைசாற்றும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த விளையாட்டுகள் எல்லாம் நம்மூர் கிராமங்களுக்கு உரியதாக இருந்தாலும் படம் எடுக்கப்பட்டிருப்பது என்னவோ முற்றிலும் மலேஷியாவில். அது தான் இன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. வாழ்க்கைக்கு உதவாது என்று பெரியோர்களால் ஒதுக்கப்பட்ட நல்ல விஷயங்கள் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் நமக்கு கை கொடுக்கும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது.
புதுமுகங்களான தமிழ், பிரசாத், நரேஷ் என்று ஒன்றுக்கு மூன்று பேர் கதையின் நாயகர்களாகவும் தீப்தி ஷெட்டி என்ற அழகிய புதுமுகம் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் பெயருக்குக் கூட காதல் என்பது ...
