ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் இருக்கும் ஒரு கிடாயின் கருணை மனு
தரமான படங்களை தயாரிப்பதில் தேசிய அளவில் தன்னிகரற்று இருக்கும் ஈரோஸ் international நிறுவனம் தங்களது பெருமைக்கு உரிய தயாரிப்பான "ஒரு கிடாயின் கருணை மனு" படத்தை வருகின்ற ஜூன் 2ஆம் தேதி வெளி இட உள்ளனர்.
"சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படத்துக்கு கிடைத்த மரியாதை அளவுக்குள் அடங்காதது. விஸ்தரிக்க பட்ட கோடை விடுமுறையில் குழந்தைகள் மட்டுமின்றி , பெரியவர்களும் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பர். கிராமிய பின்னணியில் இருந்து வந்து தற்போது நகரத்தில் வாழ்வோருக்கு தங்களுடைய கிராமிய நினைவுகளை பசுமையாக மீண்டும் நெஞ்சில் பூக்க வைக்கும் "ஒரு கிடாயின் கருணை மனு" என்று நம்பிக்கையுடன் கூறினார் ஈரோஸ் நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அதிகாரி சாகர் சத்வானி....
