தனியிசைக் கலைஞர்களுக்காக இயக்குநர் பா.இரஞ்சித்துடன் கைகோர்த்த “ஹிப்ஹாப்” ஆதி!!
இயக்குனர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்”, “கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ரூட்ஸ்” ஆகிய அமைப்புகளின் சார்பில் தனியிசைக் கலைஞர்களுக்கான இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனியிசைப் பாடகர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். தமிழகம் முழுவதுமிருந்து பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர் ஹிப்பாப், ராப், கானா, நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்பட்டன.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்,
“கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவை முதலில் அறிமுகப்படுத்தி இசை நிகழ்ச்சியை நடத்திய பிறகு பல தனியிசைக்கலைஞர்களும் தொடர்ந்து தொடர்புகொண்டு பாடுவதற்க்கு வாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வாய்ப்புக்கேட்கிற எல்லோருக்கும் ஒரு மேடையை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்கிற நோக்கில் “ரூட்ஸ் (Roots)” என்கிற அமைப்பை ஏற்படுத்தி மேலும் அதிகமான திறமையானவர்களுக்கு வாய்ப்புகொடுக்கவ...
