மர்மம், திகில், சஸ்பென்ஸ்… ரசிகர்களை கவர வருகிற ‘அரூபி’! – சென்னை விழாவில் படக்குழுவின் நம்பிக்கை முழக்கம்
மர்மம், திகில், சஸ்பென்ஸ்... ரசிகர்களை கவர வருகிற ‘அரூபி’! – சென்னை விழாவில் படக்குழுவின் நம்பிக்கை முழக்கம்.
சென்னை:
மலையாளத்தில் உருவாகியுள்ள மர்மம் மற்றும் திகில் கலந்த ‘அரூபி’ திரைப்படம் விரைவில் தமிழ் ரசிகர்களையும் சந்திக்க தயாராகியுள்ளது. இதன் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள், ஊடகத்தினர் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி உற்சாகமான சூழலை உருவாக்கியது.
விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் திகில் கலந்த காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. "சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது..." என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், பழமையான மாளிகை, அமானுஷ்ய சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் பரபரப்பான காட்சிகளின் மூலம் படத்தின் மீதான எத...
