
*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (16.02.2025),
முதல் நிகழ்ச்சியாக,
*வடசென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக கழக நிர்வாகி திரு. உதயா அவர்களின் ஏற்பாட்டில் ,
துறைமுகம் பகுதி 59-வது வட்டத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளாக 100 பெண்களுக்கு குடம், புடவை மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.!
இந்நிகழ்ச்சியில் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகி திரு.வேலு அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்சியில் சென்னை வடக்கு (வ) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.V.சிவா, மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் திரு.கட்பிஸ், திரு.K.விஜய், திரு.B.ஜெகன், திரு.நவின், திருமதி.பல்லவி, திரு.T.ராஜேஷ், திரு.தினேஷ் ராஜா, வழக்கறிஞர் திரு.தன்ராஜ், திருமதி.இந்திரா, மகளிர் நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.