
கேப்மாரி என்ற பெயரை கேட்டதும் பலருக்கும் என்ன இது?அப்படி என்ன இந்த படத்தில் என வித்தியாசமாக தோன்றும் தானே. அதுவும் ஒரு மூத்த அனுபவம் வாய்ந்த இயக்குனரின் படம் என்பதால் சற்று எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதே பார்வையுடன் கேப்மாரியை பார்ப்போம்.
படத்தின்ஹீரோ ஜெய் பீர் பானத்திற்குஅடிமை. ஒருமுறைஅவர் வெளியூர் பயணம் செல்லும்போதுரயிலில்ஹீரோயின் வைபவி சாண்டில்யாவைசந்திக்கிறார். இருவரும்ஒரே அறை கோச்சில் பயணிக்கிறார்கள்.
இருவரும்பேசிக்கொள்ள அறிமுகமாகிறார்கள். பின்ஜெய் அந்த பானத்தை அருந்தஹீரோயினும் குடிக்க இருவரும்நிலை தடுமாறி எல்லை தாண்டுகிறார்கள்.பின்எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும் இவர்கள் நீண்டமாதங்களுக்கு பின் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள்.
உடனேதிருமணம் செய்துகொண்டு இல்லறவாழ்க்கையில் இணைந்து காதலிக்க தொடங்குகிறார்கள். அதேவேளையில் ஜெய்க்கு அலுவலகதோழியாக இருக்கிறார் நடிகை அதுல்யா. ஒருபக்கம்இவர் ஹீரோவை ஒரு தலைபட்சமாககாதலிக்கிறார்.
ஒருநாள் அதுல்யாவின் வீட்டில் ஜெய்பீர் பானம் அருந்தி அதீதபோதைக்கு ஆளாகிறார். சிலநாட்களுக்கு பின் அதுல்யா கர்ப்பமானகோலத்தில் நிற்க வந்து நிற்க ஜெய் மற்றும் வைபவி அதிர்ச்சியாகிறார்கள்.
காதல்விசயம் வைபவிக்கு தெரியஅவ்வளவுதான் ஜெய்க்குபிரச்சனைக்கு மேல் பிரச்சனை?பிரச்சனைவிவாகரத்து வரை செல்கிறது. உண்மையில்என்ன நடந்தது?ஜெய்,வைபவிஇருவரும் பிரிந்தார்களா?அதுல்யாஎன்ன ஆனார்,ஜெய்எப்படி சமாளித்தார்என்பதே இந்த கேப்மாரி.
ஜெய்பலரும் விரும்பும் ஒரு லவ்ஹீரோ. ஆனால்இப்படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக மாறி விட்டார். ஐடி ஊழியராக இருக்கும் அவருக்குபீர் என்றால் உலகத்தையே மறந்துபோய்விடும். வழிபயணத்தில்சந்தித்த ஹீரோயின் அவரின்வாழ்க்கைத்துணையாகவேமாறிப்போகிறார்.
முதலிரவில்அவருக்கு ஒரு இக்கட்டானகண்டிசன்.இதற்காகஅந்தஒன்றைவாங்க அவர் வண்டி எடுத்துசுத்த கடைசியில் வேறொருபிரச்சனையில் சிக்க படம்பார்ப்பவர்களை மிகவும் சிரிக்க வைக்கிறது.
பல இடங்களில் அவர் பேசும் வசனங்கள்இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. படத்தில் ஹீரோ, ஹீரோயின்இருவருக்கும் மிக நெருக்கமானகாட்சிகள்,படுக்கையறைகாட்சிகள் என நீண்டு கொண்டேசெல்கிறது.
ஹீரோயின்வைபவி ஒரு அப்பாவி பெண் போல.பிரச்சனைகள்அனைத்தும் தெரிந்த பின் ஜெய்யைவிட்டுக்கொடுக்கமுடியாமல்திணறும் காட்சிகள் பெண்களின்மனநிலைக்கே உரியது. பல படங்களில் நடித்துள்ள இவர்இப்படத்தில் கூடுதல் கவர்ச்சிகாட்டியுள்ளார்.நடிப்பு ஓகே. ஆனால் ஓவர் ரொமான்ஸ்க்குள் தள்ளப்பட்டபரிதாபம்.
பலமனங்களை கவர்ந்த நடிகை அதுல்யாஇப்படத்தில் இதுவரை இல்லாதவேடத்தில் நடித்துள்ளார்.இவராஇப்படி என சிலருக்கு தோன்றலாம்.இவரின்வசனங்களிலும் இரட்டை அர்த்தம்கலந்திருக்கும்.
படத்தில் காமெடிக்கு தேவதர்ஷினி,சத்யன்மற்றும் இசையமைப்பாளர்சித்தார்த் (நடிகராக) சிலர் இருக்கிறார்கள்.பெண்களேஅந்தரங்க விஷயங்களை ஓப்பனாகபேசிக்கொள்கிறார்கள்.
இயக்குனர்சந்திரசேகர் பல வருடங்களுக்குபின் சினிமாவில் ஒரு படத்தை கொடுத்துள்ளார். அவருக்குஇது 70 வதுபடம். இந்தவயதில் இப்படி ஒரு படமா என்றகேள்வி பலருக்கும் வரலாம்.
திருமணவாழ்க்கையில் பாலியல் உறவும்ஒரு அங்கம் என காமசூத்ராவைதழுவி அழுத்தி சொல்கிறார் இயக்குனர்.கிளைமாக்ஸில் ஏதோ சில விஷயங்கள் கதையுடன் பொருந்தவில்லையோ என்ற கேள்வி?
சித்தார்த்விபின் இசையமைப்பில் பாடல்கள்ஓகே ரகம் ஆனாலும் மனதில்ஒட்டாமல் போய் விடுகிறது.அனிருத்குரலில் 2பாடல்கள்.அதீதமானபாடலால் படம் நீளமாக தெரியலாம்.
பிளஸ்
திருமணவாழ்வில் பெண்களின் எதிர்பார்ப்பைஅழுத்தி சொன்னது.
மைன்ஸ்
இண்ட்ரவலுக்குமுன்பே மூன்று பாடல் கொஞ்சம்போர்.
ரொமான்ஸ்ஓவராக திணத்திருப்பது போலஒரு ஃபீல்.
பெண்களுக்குமன திருப்தி இல்லாமல் போகலாம்.
மொத்தத்தில் கேப்மாரி ஆண்களுக்கு எண்டர்டெயின்மெண்ட்.
