Friday, April 19
Shadow

இதுவரை காணாத செண்டிமெண்ட் மற்றும் சஸ்பென்ஸ் ’த்ரிஷ்யம்’ படத்தில் காத்திருக்கிறது – மோகன்லால்

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’த்ரிஷ்யம்’. இந்த திரைப்படம் தமிழ் உள்பட பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ’பாபநாசம்’ திரைப்படம் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கும் நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து அமேசான் பிரைம் பத்திரிக்கையாளர்களுக்கு zoom விடியோவில் படக்குழுவினர் கலந்துரையாடல்நடந்தது இதில் மோகன்லால் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் இன்னும் அதிகமான சஸ்பென்ஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்தார். முதல் பாகத்தில் இருப்பது போலவே இரண்டாம் பாகத்திலும் உறவுகளில் நெருக்கம் குறித்தும், பார்வையாளர்களை கவரும் வகையில் செண்டிமெண்ட் மற்றும் சஸ்பென்ஸ் இருக்கும் என்றும் கூறியுள்ளார்

மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கப்போகும் விமர்சனத்திற்கு வெகுவாக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதேபோல் ’த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள மீனாவும் இந்த படம் கண்டிப்பாக ஆடியன்ஸ் அனைவருக்கும் பிடிக்கும் என்ற என்று கூறினார்.