Wednesday, December 17
Shadow

தீயவர் குலை நடுங்க’ — திரை விமர்சனம். (Rank 2/5)

திரை விமர்சனம்: ‘தீயவர் குலை நடுங்க’ — பார்வையாளரை மட்டும் குலுங்க வைக்கும் சலிப்புத் திருவிழா

‘தீயவர் குலை நடுங்க’ படம் ஆரம்பிக்கவே எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொடூரமாகக் கொலை செய்யப்படும் காட்சியுடன் தொடங்குகிறது. இந்த கொலை வழக்கை விசாரிக்க வருபவர் அதிகாரி அர்ஜுன். மற்றொரு கோணத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக அறிமுகமாகிறார். இவளுக்கும் பிரவீன் ராஜாவுக்கும் ஒரு மந்தமான காதல் track ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே தொடர்ச்சியாக நடக்கும் கொலைகள் — யார் இந்தக் கொலைகாரர், ஏன் கொலைக்குப் போகிறார், இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு என்ன தொடர்பு — என்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயல்கிறார் இயக்குநர். ஆனால் “முயற்சி” மட்டும்தான்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தன் கம்பீரத்தால் சில காட்சிகளில் திரைப்படத்தை தாங்குகிறார். ஆனால் அத்தனைக்கும் உயிர் ஊட்டும் வகையில் எழுதப்பட்ட கேரக்டர்களோ, gripping சஸ்பென்ஸோ ஒன்றும் இல்லை. விசாரணை காட்சிகள் சில இடங்களில் சரியாக இருந்தாலும், படத்தின் ஈர்ப்பு அலைபாயாமல் ஒரே ரீதியாக விழுந்துவிடுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் படத்தின் வேகத்தைப் பின்தள்ளுகிறது. பிரதானக் கதாபாத்திரம் என்பதற்காக அவரை unnecessary-ஆக் ஆக்ஷன் சீன்களில் தள்ளிப்போட்டிருக்கிறார்கள். நடிப்பில் குறையில்லை; ஆனால் எழுதப்பட்ட சின்னு பின்னு காட்சிகள் அவரைச் சுமந்து நிற்க விடவே இல்லை.

பிரவீன் ராஜா செய்யும் அப்பாவி கதாபாத்திரம் பாதி cook ஆகாத அளவுக்கு மட்டுமே வேலை செய்கிறது. வேல ராமமூர்த்தி, அபிராமி வெங்கடாசலம், பிராங்ஸ்டார் ராகுல் போன்றோரின் நடிப்பு ‘சரி’ என்ற அளவிலேயே. நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம் குமார் மீது unnecessary-ஆக வைத்திருக்கும் obscene காட்சிகள், வசனங்கள் பார்வையாளரையே நெருட வைக்கும் வகையில் உள்ளது — ஏன்? எதற்காக? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு apartment sequences-ல் மட்டும் சற்றே உயிர் காட்டுகிறது. பரத் ஆசிவகனின் இசை மிகவும் சாதாரணம். பெண்கள், சிறுமிகள் — குறிப்பாக மனநலம் மற்றும் ஆட்டிசம் பிரச்சினை கொண்ட குழந்தைகள் — எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை தொட்டுக்கொள்வது நல்ல நோக்கம். ஆனால் அந்த நோக்கத்தை தாங்கும் திரைக்கதை தன்னைவிட முன்னரே உயிரிழந்து கிடக்கிறது.

முதல்பாதி முடிந்தே எப்படி Interval வரும் என்று காத்திருக்க வைக்கும் அளவுக்கு முன்னேற்றமே இல்லாமல் போகிறது. முதல் காட்சியிலேயே யார் கொலைகாரர் என்பது புரிந்துவிடுகிறது. உதாரணமாக, interval-ல் காட்டும் “big reveal” கூட “இதுதான் வேறென்ன?” என்ற தோரணையாக மாறுகிறது. இரண்டாம் பாதி நீளமாகவும் சலிப்பாகவும் இழுத்துச் செல்லப்படுகிறது.

முடிவாக— ‘தீயவர் குலை நடுங்க’: தயவு செய்து பார்வையாளரை மட்டும் குலுங்க விடாதீர்கள்

படத்துக்கு ஒரு நல்ல நோக்கம் இருந்தாலும், வலுவான திரைக்கதை இல்லாததால் அது ஒரு half-baked crime thriller-ஆகவே மாறியுள்ளது. சஸ்பென்ஸ் இல்லை, புதுமை இல்லை, உணர்வு இல்லை. பார்வையாளரை மட்டுமே சோதனைக்கு உட்படுத்தும் ‘குலை நடுங்க’ அனுபவம்.