Saturday, April 18
Shadow

தாசரி நாராயண ராவ் மரணம்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்…

நேற்று காலமான பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான தாசரி நாராயணன ராவ்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

” இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என தெலுங்கு சினிமாவின் சகாப்தமாக விளங்கிய திரு. தாசரி நாராயண ராவ் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை கொள்கிறோம். தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேல் படங்களை இயக்கியதோடு பல படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களும் எழுதி சாதனை புரிந்துள்ளார்.

மேலும் மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் பல வழங்கி கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராக நாட்டுக்கு சேவை புரிந்துள்ளார்.

தெலுங்கு சினிமா உலகின் வழிகாட்டியாக திகழ்ந்த அவரது மறைவு தென்னிந்திய சினிமா உலகிற்க்கே மாபெரும் இழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரை துறையினருடன் துக்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்”

Leave a Reply