Sunday, June 28
Shadow

பீட்டாவை செருப்படி அடிக்க போகும் நடிகர் சூர்யா

தமிழக மாணவர்கள் மட்டும் இல்லமால் ஒட்டு மொத்த தமிழர்களின் போராட்டமாக ஊருவாகி வருகிறது கடந்த ஐந்து நாட்களாக இந்த போராட்டம் வலுவடைந்துள்ளது இதனால் அரசியல்வாதிகள் முதல் பல பயந்து மட்டும் இல்லாமல் வியப்படைந்துள்ளனர். மாணவர்களின் சக்தி இப்படி உருவாகி இருக்கிறது என்று இந்த சக்தியை உடைக்க பல முயற்சி செய்ததும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது மாணவர்களுக்கு பக்க பலமாக தமிழக போலீஸ்கை கோர்த்து இந்த அமைதி போராட்டம் மேலும் மிக பெரிய சக்தியாக அமைத்து விட்டது.

பொதுவாக மக்களை திசை திருப்ப ரெண்டு சக்திகளை பயன்படுத்துவார்கள் ஒன்று மதம் இரண்டு சாதி மூன்று திரையுலகினர்களை தவறாக பேசி போராட்டத்தை திசை திருப்புவார்கள். அப்படி தான் பீட்டா இந்த போராட்த்தை உடைக்க முயற்சி செய்தது அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது முஸ்லிம் மக்களை தூண்டும் வகையில் கேவலமான ட்விட்டர் செய்தியை போட்டது இப்ப நடிகர் சூர்யாவை வம்புக்கு இழுத்துள்ளனர்.

பீட்டா அமைப்பு நடிகர் சூர்யா சி3 படத்தை விளம்பரம் செய்ய தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுகிறார் என்ற ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. முற்றிலும் தவறான இந்த செய்தி சூர்யா மற்றும் அவரின் குடும்பத்துக்கு வருத்தத்தை அளித்துள்ளது. பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா போராடி வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆதலால் தவறான செய்தியை பரப்பி வரும் பீட்டா அமைப்பை மனிப்பு கோரும்படியும் , அவர்கள் பரப்பிய செய்தி தவறானது என்பதை தெரிவிக்கும் வகையில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை 7 நாட்களுக்குள் வெளியிடும்படியும் கூறி நடிகர் சூர்யாவின் வக்கீல் ஆர்.விஜய் ஆனந்த் பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்

Leave a Reply