
நலம் காக்கும் தயாரிப்பாளர் அணி – வெற்றி உறுதி.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026–2029ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் சங்கத் தேர்தல் வரும் 2026 பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக நடைபெறுவதால், தயாரிப்பாளர் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் தலைவர் முரளி ராமசாமி, மன்னன், பைவ் ஸ்டார் கதிரேசன் ஆகியோருடன், ஜி.எம். தமிழ்குமரன் ஆகியோர் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.
இதில், “தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி” என்ற பெயரில் ஜி.எம். தமிழ்குமரன் தலைமையிலான அணி களத்தில் இறங்கியுள்ளது.
தயாரிப்பாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இந்த அணி தேர்தலை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில், ஜி.எம். தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில்
துணைத் தலைவர் பதவிக்கு :
ஆர்.கே. சுரேஷ், எஸ். கமலக்கண்ணன்
செயலாளர் பதவிக்கு :
ஆர். ராதாகிருஷ்ணன், கமீலா நாசர்
பொருளாளர் பதவிக்கு :
என். சுபாஷ் சந்திரபோஸ்
இணைச் செயலாளர் பதவிக்கு :
சுஜாதா விஜயக்குமார்
போட்டியிடுகின்றனர்.
மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்காக மூத்த தயாரிப்பாளர்களான அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், எச். முரளி, எம். கபார், ஆர். மாதேஷ் உள்ளிட்டவர்களுடன், சாலை சகாதேவன், பைஜா டாம், எஸ். ஜோதி, வி. பழனிவேல், கே. செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் ஏ. முருகன், ஜி.எம். டேவிட்ராஜ், டி.என். தாய்சரவணன், கே. முருகன், வி. ஞானவேல், பிரவின்காந்த், வி.என். ரஞ்சித் குமார், எஸ். ஜெயசீலன், ராஜா @ பக்ருதீன் அலி அகமத், எம். தனசண்முகமணி, பி.ஜி. பாலாஜி, இசக்கிராஜா, பி. மகேந்திரன், எஸ். பிரப்தீஸ் சாம்ஸ், ஏ. ஏழுமலை, எஸ்.என். ராஜராஜன் உள்ளிட்ட பலரும் போட்டியிடுகின்றனர்.
இந்த அணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் 22.12.2025 அன்று சென்னை ஹோட்டல் ராதா பார்க் இன் மாலை 6.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலைபுலி எஸ். தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, பேராசிரியர் ஏ.எஸ். பிரகாசம், வி.சி. குகநாதன், இசையமைப்பாளர் தீனா, இயக்குநர்கள் லிங்குசாமி மற்றும் சரண் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
வேட்பாளர்களை கலைபுலி எஸ். தாணு அவர்கள் அறிமுகப்படுத்தி பேசினார். தொடர்ந்து, ஜி.எம். தமிழ்குமரன் மற்றும் ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர், தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால், சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ள நலத்திட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தயாரிப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த அறிமுகக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம், தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி மீது உறுப்பினர்களுக்கு உள்ள ஆதரவும், நம்பிக்கையும் தெளிவாக வெளிப்பட்டது.
தற்போது, அனைத்து அணிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் காணப்பட்ட பெரும் திரளான பங்கேற்பை கருத்தில் கொள்ளும்போது, ஜி.எம். தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என தயாரிப்பாளர் வட்டாரங்களில் ஆணித்தரமாக பேசப்படுகிறது.
