கேரள நாட்டிளம் பெண்களுடனே , டூரிங் டாக்கீஸ் , பட்டதாரி , மாயநதி , சாயம் உள்பட பல படங்களில் நாயகனாக நடித்து வரும் அபி சரவணன் ( எ) விஜய் விஷ்வா நடிகர் போண்டா மணி அவர்கள் உடல் நிலை சரி இல்லை என்று கேள்வி பட்ட உடன் கோயம்புத்தூரில் உள்ள தன் படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்து போண்டா மணி அவர்களை மருத்துவமனையியல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.தன்னை நேரில் வந்து சந்தித்த முதல் ஹீரோ நீ தான் தம்பி என்று போண்டா மணி கூறி அபியின் கைகளை பற்றி கொண்டார்…
மேலும் பறவை முனியம்மா, விருச்சிககாந்த்,ரங்கம்மா பாட்டி ஆகியோரும் முடியாமல் இருக்கும் போது முதல் நபராக களத்தில் நின்றவர் அபி சரவணன் எ விஜய் விஷ்வா என்பது குறிப்பிட தக்கது.