தமிழ் சினிமாவில் இன்று ஒரு முன்னணி நடிகர் பட்டியலில் முன்னிடம் வகிக்கும் நடிகர் என்றால் அது சூர்யா என்று சொன்னால் மிகையாகது. இதற்க்கு அவருக்கு அச்சாரம் போட்டது இயக்குனர் பால என்று சொன்னால் அதுவும் மிகையாகது இயக்குனர் வசந்த் தான் சூர்யாவை அறிமுக படுத்தியது இருந்தும் பாலாவின் நந்தா படமும் பிதாமகன் படமும் தான் சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய அந்தஸ்தை கொடுத்தது .
இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய சினிமாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான அந்தஸ்தை கொடுத்தது அதன் பின் முன்னணி நடிகர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். அன்று அவர் தொடங்கிய பயணம் இன்று வரை அவருக்கு இந்திய சினிமாவின் உச்சத்தில் அமரசெய்துள்ளது .
இயக்குனர் பாலா மற்றும் சூர்யா பிதாமகன் மற்றும் நந்தா படத்திற்கு பிறகு இவர்கள் இணையவில்ல அதாவது கடந்த இருவது வருடங்களாக இவர்கள் இணையவில்லை இந்த கூட்டணி மீண்டும் எப்ப இணையும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மிக பெரிய இனிய விருந்தாக இப்ப ஒரு செய்தி ஆம் நேற்று முன் தினம் சூர்யா அப்பா சிவகுமார் பிறந்த நாளில் சந்தித்த இவர்களை மீண்டும் இணைக்க திரு.சிவகுமார் முயற்சி வெற்றியில் முடிந்தது.
இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா இன்று அறிவித்தார் .
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…