
சவாலான கதாபாத்திரங்கள் என்றாலே நடிகர் கிஷோருக்கு மிகவும் பிடிக்கும் போல தெரிகிறது. நல்ல கதை அமசமுள்ள படங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை உடனுக்கு உடன் ஏற்று நடிப்பதில் மூலம் தன நடிப்பு பசிக்கு நிரந்தரமாக தீனி போட்டுக் கொண்டு இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது தயாராக உள்ள ‘ கல்கி ‘ என்ற 45 நிமிட படம் சர்வதேச அளவில் பெரும் பெயர் ஈட்டி தரப்பு போகும் படம் என்று திரை உலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
பிரமோத் பிலிம்ஸ் என்னும் புதிய படநிறுவனத்தின் சார்பில் ஸ்ருதி தயாரிக்கும் இந்த படத்தில் கிஷோருக்கு இணையாக நடிப்பவர் யாஸ்மின்.இந்தப் படத்தின் போஸ்டர் பெருமளவில் அனைவரையும் கவர்ந்து உள்ளது என்றால் மிகை ஆகாது.புதிய இயக்குனர் திலீப் இயக்க , பிரபல பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் திரைக் கதை அமைத்து வசனம் இயக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய , ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய , கிரிஷ் இசை அமைக்கிறார்.
‘இந்தப் படத்தின் தலைப்பே கதை சொல்லும். கல்கி என்றால் அழிப்பவர் என்று அர்த்தம். வெளி நாடுகளில் நடந்துக்க கொண்டு இருக்கும் திரைப்பட விழாக்களில் ‘கல்கி ‘ கலந்துக் கொண்டு நமது நாட்டுக்கு சிறப்பு செய்யும். கலை இயக்குனர் ரெம்போனின் பணி மிகவும் போற்றத்தக்கது. கிஷோரின் நடிப்பு அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுக்கும்’ எனக் கூறினார் தயாரிப்பாளர் சுருதி.