Monday, May 25
Shadow

இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு மறைந்த தினம் பதிவு

இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியிருந்தனர்.

ரா. கிருஷ்ணன் 1909 சூலை 18 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். தொடக்கத்தில், கோவையில் செயல்பட்டு வந்த பக்சிராஜா ஸ்டுடியோவில் (அப்போதைய கந்தன் ஸ்டுடியோ) பணியாற்றினார்.

சா. பஞ்சு 1915 சனவரி 24 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரத்தில் பிறந்தார். தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.

1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 ஆவது வயதில் சென்னையில் காலமானார். பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காதிருந்த ரா. கிருஷ்ணன், 1997 ஜூலை 17 அன்று தனது 87 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

பூம்பாவை, பங்கஜவல்லி, பைத்தியக்காரன், ரத்தினகுமார், நல்ல தம்பி, பராசக்தி, கண்கள், ரத்தக்கண்ணீர், சந்தா சகு, குலதெய்வம், புதையல், பாபி, மாமியார் மெச்சின மருமகள், பர்க்கா, திலகம், தெய்வப்பிறவி, பிந்த்யா, சுகா சிந்தூர், சாதி, மேன் மௌஜி, குங்குமம், வாழ்க்கை வாழ்வதற்கே, சர்வர் சுந்தரம், மேரா குசார் கியா கை, குழந்தையும் தெய்வமும், பெற்றால்தான் பிள்ளையா, லேத மனசுலு, லாலா, டு கலியான், உயர்ந்த மனிதன், அன்னையும் பிதாவும், எங்கள் தங்கம், அனாதை ஆனந்தன், மெயின் சுந்தர் கூன், பிள்ளையோ பிள்ளை, இதய வீணை, அக்கா தம்முடு, பூக்காரி, சமையல்காரன், சந்தார், பத்து மாத பந்தம், கலியுக கண்ணன், வாழ்ந்து காட்டுகிறேன், காசுமீர் பல்லோடு, அணையா விளக்கு, வாழ்வு என் பக்கம், இளைய தலைமுறை, என்ன தவம் செய்தேன், சொன்னதைச் செய்வேன், சக்கரவர்த்தி, பேர் சொல்ல ஒரு பிள்ளை, அண்ணபூரணி, வெள்ளி ரதம், நீலமலர்கள், நாடகமே உலகம், மங்கல நாயகி, மலரும் நினைவுகள்