
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் இறுதி கட்ட போட்டி வரை சினேகன், ஆரவ், கணேஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.இந்த நிகழ்ச்சி முடிந்தாலும் இதை பற்றி பல செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கு இதற்கு முக்கிய காரணம் ஒரு சிலர் பொறாமை என்றும் சொல்லலாம் . அதோடு இவர்களாக நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் என்றும் சொல்லலாம் அந்த வகையில் சினேகன் சொல்லும் சொல் இதோ
இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக சினேகன் தான் இருப்பார் என பலரும் எதிர்ப்பார்த்த நிலையில் ஆரவ் வெற்றியை தட்டி சென்றார்.
சினேகன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார், ஆனால் அதற்காக அவருக்கு பரிசுத் தொகை எதுவும் வழங்கவில்லை, இது பற்றி சினேகன் வானொலி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ” வெற்றி பெற்றிருந்தால் அந்த பணத்தை தொடவே கூடாது அதை அப்படியே நூலகம் கட்ட செலவு செய்ய வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.
அதை நான் மேடையிலேயே அறிவித்து கமல் சாரிடம் திறப்பு விழாவிற்கான தேதியையும் வாங்கி இருப்பேன் என கூறியுள்ளார், ஆனால் மக்கள் நினைத்தது வேறொன்று. அதை நானும் ஏற்று கொள்கிறேன்.
இதற்காக நான் வருத்தப்படவில்லை , என் கனவு சில காலம் தள்ளி போயுள்ளது அவ்வளவு தான், ஆனால் நிச்சயம் நூலகம் காட்டுவேன் என கூறியுள்ளார்.
