
சுரேஷ் ரவி – யோகிபாபு இணையும் புதிய கிராமத்து ஃபேமிலி எண்டர்டெயினர் – படப்பிடிப்பு நிறைவு!
சென்னை:
BR Talkies Corporation நிறுவனத்தின் சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி ஆகியோர் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் K. பாலையா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தில் சுரேஷ் ரவி மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மதுரை, இராமநாதபுரம், தேனி, சென்னை ஆகிய பகுதிகளில் 45 நாட்கள் தொடர்ந்து நடந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
BR Talkies Corporation தயாரிப்பில், முன்னதாக ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்ற “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்திற்குப் பிறகு, இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பாக இந்த படம் உருவாகி வருகிறது.
கிராமத்து பின்னணியிலும், நகர வாழ்க்கையின் நவீனச் சூழலையும் இணைத்து, சமூக அக்கறை கருத்தோடு, முழுமையான நகைச்சுவை மற்றும் ஃபேமிலி எண்டர்டெயினர் ஆக இப்படம் உருவாகி வருகிறது.
இயக்குநர் K. பாலையா எழுதி இயக்கும் இப்படத்திற்கு,
ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்
இசை: N. R. ரகுநந்தன்
படத்தொகுப்பு: தினேஷ் போனுராஜ்
கலை: C. S. பாலச்சந்தர்
படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
