பட தயாரிபாளர்களை மதிக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் 24AM பட நிறுவனம்
‘திட்டம் போட்டு கட்டம் கட்றதுல ஏ.வி.எம் நிறுவனத்திற்கு இணையே இல்லை’ என்றொரு கருத்து கோடம்பாக்கத்தில் ஒலித்து வருகிறது. இத்தனைக்கும் ஏவிஎம் படம் தயாரிப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆகிவிட்டது. அப்படியிருந்தும் அவர்கள் பெற்ற அந்த நல்லப் பெயரை அவர்களாலேயே காப்பாற்ற முடியாத அளவுக்கு கதறவிட்டார்கள் அவர்களால் நியமிக்கப்பட்ட இயக்குனர்கள். விஷயம் இதுதான்…. ஏ.வி.எம் நிறுவனம் ஒரு படத்தை துவங்கினால், துவக்க விழாவிலேயே ரிலீஸ் தேதியையும் தைரியமாக வெளியிட்டு விடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மட்டும் நன்மை அல்ல. இன்டஸ்ட்ரிக்கே நன்மை.
ஏ.வி.எம் படம் வருதுப்பா… ஒண்ணு, அது வர்றதுக்கு முன்னாடி நம்ம படத்தை வெளியிடுவோம். இல்லேன்னா வந்த பின்பு வெளியிடுவோம். என்று ஒரு திட்டத்தோடு செயல்படுவார்கள் மற்ற தயாரிப்பாளர்கள். இப்போது நிலைமை அப்படியல்ல. ஒரு படம் எப்போது திரைக்கு வரும் என்பதை தீர்மானிக்கிற சக்தி, தியேட்டர...
