முடிஞ்சா இவன புடி திரைவிமர்சனம் (பழய மசாலா )
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘நான் ஈ’ கிச்சா சுதீப் – நித்யா மேனன் ஜோடி நடிக்க, பல பழையபடங்களின் சாயலில் வந்திருக்கும் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் படம் தான் “முடிஞ்சா இவனபுடி”.
கதை
இப்படக் கதைப்படி, கதாநாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் பதுக்கல் கூடாரத்தில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்துவருகிறார். அவ்வாறு சுதீப் செய்யக்காரணம், அப்பாவை இழந்த அவரது இளம் வயது கொடூர வாழ்க்கைதான்… எனும் நிலையில், பெரிய தொழிலதிபரான முகேஷ் திவாரியின் பங்களாவில்புகுந்து, அவர் பதுக்கிவைத்திருக்கும் கறுப்பு பணத்தையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார். கொள்ளைபோனது கறுப்பு பணம் என்பதால் முகேஷ் திவாரியால் போலீசில் முறையாக புகார் அளிக்கமுடியவில்லை.
இருப்பினும், தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி சாய்ரவிமூலமாக அந்த பணத்தை திருடியவன...
