“ஆரோமலே” – திரைவிமர்சனம் Rank 4/5
திரைவிமர்சனம்: “ஆரோமலே” – மயிலிறகால் வருடும் காதல் கவிதை
சமீப காலமாக தமிழ் சினிமாவில் கதைக்கே உயிர் கொடுக்கும் பல தரமான படங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஒரு சிறந்த படைப்பை தமிழ் திரையுலகம் ரசிகர்களுக்கு பரிசாக அளித்து வருகிறது. அந்த வரிசையில், கடந்த வாரம் “ஆண்கள் பாவம் பொல்லாதது” நகைச்சுவையுடன் கூடிய அருமையான கருத்தைச் சொன்ன படமாக இருந்தது. இந்த வாரம் அதே தரத்தில் மனதை வருடும் காதல் கவிதையை “ஆரோமலே” என்ற தலைப்பில் இயக்குநர் சரங் தியாகு நம்மைச் சந்தித்துள்ளார்.
கதை சுருக்கம்
பெண்களைப் பார்த்தவுடன் காதலில் விழும் கிஷன் தாஸ், எப்போதும் தோல்வியையே சந்தித்து வருகிறான். ஒரு காதலியின் கல்யாணத்தை நிறுத்த முயற்சிக்கும் போது ஏற்பட்ட சிறிய சலசலப்பால் தாயின் கோபத்தையும் கண்டனத்தையும் எதிர்கொள்கிறான். மனமுடைந்த அவர், தந்தையின் அறிவுரையின்படி ஒ...
