காந்தா – திரைவிமர்சனம் (அனைவரையும் கவருவாள்). Rank 4/5
காந்தா – கனவு தொழிற்சாலையின் மறுபக்கம்
1950களின் தமிழ் சினிமா உலகம். அந்தக் காலத்து உச்சநட்சத்திரமாக விளங்குபவர் துல்கர் சல்மான். அவரை உருவாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவு கதையாக உருவாகும் ‘சாந்தா’ என்ற படத்திலிருந்து துல்கர் விலகி விடுகிறார். பின்னர், மீண்டும் அந்தப் படத்தை தொடங்க முடிவு செய்கிறார்.
ஆனால், இந்த முறை துல்கர் சல்மான் கதை, காட்சிகளில் பல மாற்றங்களை செய்யத் தொடங்குகிறார். இதனால் இயக்குநர் சமுத்திரக்கனி மனவருத்தத்தில் ஆழ்ந்தாலும், தன்னுடைய கனவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உந்துதலில் அவர் அனைத்தையும் சகித்துக்கொள்கிறார். அதற்காக, அவர் அறிமுகப்படுத்திய நாயகி பாக்யஸ்ரீயை வைத்து ஒரு திட்டம் வகுக்கிறார். அந்தத் திட்டம் வெற்றி பெற்றதா? இந்த மோதல் எவ்வாறு முடிகிறது? என்பதுதான் *‘காந்தா’*வின் மையக் கருத்து.
பிரபல நடிகருக்கும் அவரை உருவாக்கிய இயக்குநருக்கும் இடையி...
