மதுரை கோர்ட் வழக்கில் சிக்கபோகும் தனுஷ் மருத்துவர்கள் அறிக்கையில் புதிய தகவல்
சமீபகாலமாக தனுஷ்க்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்லணும் ஒன்னு போன ஒன்னு வந்துகொண்டே இருக்கு இப்ப தான் சுசித்ரா பிரச்னை முடிந்து அப்பாடா என்றார் அதுக்குள்ள மீண்டும் மதுரை கோர்ட் பிரச்சனை ஆரம்பித்து விட்டது ,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா? என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மார்ச் 2 ஆம் தேதி தனுஷ் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில், தனுஷ் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்...
