“S3 “தீபாவளி ரேசில் இருந்து விலகும் சூர்யா
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை தீபாவளி அன்று படங்களை வெளியிடுவதற்கு கடும் போட்டிகள் எப்போதுமே இருப்பது வழக்கம். அன்றைய தினத்தில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் ரசிகர்களிடமும் ஆர்வம் அதிகம் இருக்கும். அதனால்தான் மற்ற விசேஷ நாட்களை விட தீபாவளி அன்று படங்களை வெளியிட பலரும் முயற்சி செய்வார்கள்.
இந்த வருட தீபாவளியன்று “எஸ் 3, காஷ்மோரா, கத்திச் சண்டை, கொடி, கடவுள் இருக்கான் குமாரு” ஆகிய படங்கள் வெளிவருவதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தப் போட்டியில் இருந்து தற்போது 'எஸ் 3' விலகியுள்ளதாகத் தெரிகிறது.
ஒரே சமயத்தில் அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி இருவரும் போட்டி போடுவதால் தேவையற்ற வேண்டாத விஷயங்கள் வளரக் காரணமாகிவிடும் என நினைக்கிறார்களாம். ஒருவர் படம் நன்றாக இருந்து மற்றவர் படம் சுமாராக இருந்தால் கூட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதையாவது பரப்பிவிடுவார்கள் என பயப்படுகிறார்களாம்.
சமூக...
