
அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா”
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிந்து மாதவி இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்படம் திரைக்கு வர திட்டமிட்டு படபிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது .
