
தெலுங்கு சினிமா உலகம் இப்போது ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சையால் பெரும் பதட்டத்தில் இருக்கிறது. அண்மமையில் நடிகை ஸ்ரீ ரெட்டி பொது இடத்தில் ஆடைகளை கழற்றி நின்று போராட்டம் செய்தார்.
இந்த சர்ச்சையின் பின்னணியில் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் மற்றும் சில தயாரிப்பாளர்களும் சிக்கினர். தொடர் சர்ச்சையில் நடிகர் பவன் கல்யான் ரெட்டியின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தார்.
இதனால் அந்த நடிகை செருப்பால் தன்னை அடித்துகொண்டு அவரின் கருத்துக்கு மறுகருத்து தெரிவித்திருந்தார். இது பவன் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியது.
இந்நிலையில் ஸ்ரீ மன்னிப்பு கேட்டு, தனக்கு ரூ 10 கோடி தருவதாக சொல்லி பின்னால் இருந்து என்னை தூண்டிவிட்டதால் பவனுக்கு எதிராக பேசினேன் என கூறினார்.
தற்போது சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா நான் தான் ஸ்ரீ ரெட்டியை அப்படி செய்ய சொன்னேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் பவன், ராம் கோபாலும், சந்திரபாபு நாயுடுவின் மகனான அமைச்சர் லோகேஷும் தன்னை பழிவாங்க இப்படி செய்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
