
நான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி, தற்போது திருமணம், கேரியர் மற்றும் வதந்திகள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
திருமணம் குறித்து பேசிய அவர், நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை. திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும் என்றார்.
தனது கேரியர் குறித்து பேசிய அவர், நான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தன்னை பற்றி வரும் வதந்திகள் குறித்து பேசிய அவர், என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை என்று கூறியுள்ளார்.
