
ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
மேலும் ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக நேற்று (ஜனவரி 20-ம் தேதி) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உண்ணாவிரதம் மற்றும் மவுன போராட்டம் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், கமல் ஹாசன், தனுஷ், விக்ரம், சத்யராஜ், த்ரிஷா, வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.
நடிகர் சங்கத்தை பொறுத்தவரை போராட்டம் தோல்வி என்று தான் சொல்லணும் இவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எல்லோரும் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்கள் ஆனால் பலர் கலந்து கொள்ளவில்லை என்று தான் சொல்லணும் குறிப்பாக விஜய் கலந்து கொள்ளவில்லை இவர்கள் எண்ணமே விஜய் மற்றும் அஜித் கலந்து கொள்ளவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர் ஆனால் விஜய் கலந்து கொள்ளாமல் விஜய் அனைவரையும் அவமதித்துள்ளார் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் சில குறிப்பிட்ட நடிகர்கள் கலந்து கொள்ளாததும் தோல்விதான்
