
ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
இன்றோடு ்ஐந்தாவது நாளாக தமிழகம் முழுவதும் பெரும் போராட்டமே நடக்கிறது. இதில் இசையமைப்பாளர்கள் ஆதி, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் இயக்குனர்கள் அமீர், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் ஆரி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ், சிம்பு ஆகியோர் களத்தில் இறங்கியும் இன்னும் சில திரை பிரபலங்கள் ட்விட்டர் மூலமாகவும் குரல்கொடுத்து வருகிறார்கள்.
இன்றைய எழுச்சிக்கு முக்கிய காரணம் இளம் சிங்கம் ஹிப் ஹாப் ஆதி தான் இந்த எழுச்சியின் முக்கிய காரணம் என்பதை நாம் மறந்து விட கூடாது.

இதில் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு போலீசார் மாணவர்களுக்காக நேற்று பேசினார். முதல்வரையும் பிரதமரையும் கூட அவர் எதிர்த்து பேசினார். அவருக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது இந்நிலையில் இவர் ஒரு அஜித் ரசிகர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
