Tuesday, April 21
Shadow

பழம்பெரும் நடிகை ஜெயந்தி பிறந்த தினம்

இவர் ஒரு இந்திய நடிகை. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும்மராத்தி மொழிகளில் உள்ளிட்ட படங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரைப்படத் துறை ஜெயந்தியை அபினயா சாரதேஎன்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் அபிநய சரஸ்வதி என்று சரோஜா தேவி என்ற கன்னட நடிகை அன்புடன் அழைக்கப்பட்டார் .

கமலாகுமாரி பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் ராஜதானியில் பெல்லாரியில் 1945 ,அக்டோபர் 11 இல் பிறந்தார் . அவரது தந்தை பாலசுப்ரமணியம் பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கிலம் பேராசிரியராக பணிபுரிந்தார். அவரது தாயார் பெயர் சந்தான லட்சுமி . இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளின் மூத்தவராய் கமலா குமாரி இருந்தார் . மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் கமலா குமாரிமூன்று மூத்த உடன்பிறந்த பெண்களில் மூத்தவர், இது போக இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். கமலா குமாரியின் இளம் வயது வாழ்வு மிகவும் சிரமம் ஆக இருந்தது .தகப்பனார், தாயார் மற்றும் ஐந்து பிள்ளைகளையும் தவிக்கவிட்டு பிரிந்து சென்றார் .எனவே புது வாழ்க்கையை தேடி தாயார் சென்னைக்கு குடி பெயர்ந்தார். கமல குமாரி யின் தாயார் தன் மகளை ஒரு பாரத நாட்டிய நடனக் கலைஞராக ஆக்குவதில் ஆர்வம் கொண்டிருந்ததால் சந்திரகலா நடன பள்ளியில் சேர்ந்தார் .அப்போது கோபி சந்தா என்ற மாணவியை அங்கு சந்தித்தார் .அவர் பின்னாளில்மனோரமா என்ற பெயரில் சிரிப்பு நடிகை ஆனார் கமலகுமாரி சற்று பருமனாக இருந்ததால் அவருக்கு நடனம் ஆடுவதில் தேர்ச்சி பெறவில்லை . எனவே மனத்தளவில் நொறுங்கி போனார் .

மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் .பின்னாளில் ஜெகதேகவீருணி கதா ,குலா கெளரவம் ,கொண்டவீதி சிம்மம் ,ஜஸ்டிஸ் சவுத்ரி படங்களில் கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது . இளம் பருவ வயதிலேயே சிலதமிழ் மற்றும்தெலுங்கு திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே நடிப்பை நன்றாக கற்று தேர்ந்து மதிப்பிற்குரியவர் ஆனார் .

கன்னட திரைப்படத் துறையில் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் சுமார் முப்பது படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் . கன்னட இயக்குநரான ஒய் .ஆர். ஸ்வாமி அவரை ஓர் நடன ஒத்திகையில் கண்டார் .அவர் ஜெனு குடு படத்தில் அறிமுகம் செய்ததோடு கமல குமாரி என்ற பெயரை ஜெயந்தி என்று மாற்றினார் . ஜெயந்தி அன்றைய புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார் . கே .எஸ் .அஸ்வத் ,பண்டாரி பாய் ,ஜெயஸ்ரீ ,உதயகுமார் ,கல்யாண்குமார் மாறும் ராஜ்குமாருடன் மட்டும் 45 படங்கள் கதாநாயகியாக நடித்துள்ளார் . இவர் நடித்த படங்களில் மிஸ் லீலாவதி மிகவும் சிறப்பு வாய்ந்தது .இந்த படத்தில் சிறு வயது பெண்ணாக நடித்தார் .இது தேசிய விருது பெற்ற திரைப்படம் ஆகும் .

மிஸ் லீலாவதி கன்னட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஜெயந்தி (நடிகை), ஸ்கர்ட் , டி-ஷர்ட்ஸ் மற்றும் இரவு நேர உடைகளை அறிமுக படுத்தினார் .கன்னடத் திரையில் முதன்முதலாக நவீன காலணிகளை மிகவும் அறிமுகப்படுத்தியதற்காக அவர் பாராட்டப்பட்டார். அவர் தான் கன்னடத்தில் முதன் முதலாக நீச்சலுடைஅணிந்து நடித்தார் .தமிழ் சினிமாவில் பட்டினத்தில் பூதம் என்ற படத்தில் கே. ஆர். விஜயா முதன் முதலில் நீச்சல் உடையில் தோன்றினார் .

இவர் இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகி ஆனார் .எதிர் நீச்சல் ,இரு கோடுகள் ,பாமாவிஜயம் ,புன்னகை, வெள்ளிவிழா ,கண்ணா நலமா போன்ற படங்களிலும் ,ம. கோ. இராமச்சந்திரன் உடன் படகோட்டி (திரைப்படம்) மற்றும் முகராசி யிலும் நடித்தார் .அதிக படங்களில் ஜெமினி கணேசன் உடனும் ,முத்துராமன் ,ஜெய்சங்கர் படத்திலும் நடித்துள்ளார் .

இவரது முதல் கன்னட படம் ஜீனு கூடு .இந்த படத்தின் இயக்குனர் பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற ஒரு மகன் இருக்கிறார்

மிஸ் லீலாவதி வெற்றி பெற்று ,டில்லியில் அதற்காக தேசிய விருது வாங்க சென்றார் . இந்திரா காந்தியின் கையால் அதனை பெற்று கொண்டார் . பரிசு வாங்கி செல்கையில் மறுபடியும் திரும்ப அழைத்து இவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார் .