Sunday, June 28
Shadow

நடிகை ராஜசுலோசனா மறைந்த தினம்

ராஜசுலோசனா (Rajasulochana) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை. 275-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர்.

ராஜசுலோசனா 1935 ஆம் ஆண்டில் சித்தூரில் பிறந்தார். திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான சி.எஸ்.ராவ் என்பவரை மணந்தார். 17 வயதில் நடிக்க வந்த இவர் 1953-ல் குணசாகரி என்ற கன்னடப் படத்தில் அறிமுகமாகி தமிழில் சத்யசோதனை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

பின்னாளில் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது நடன பள்ளிகள் நடத்தி வந்தார். பின்னர் மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் “புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்” என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கதாநாயகியாகவும், குணசித்திர, வில்லி வேடங்களிலும் திரைப்படங்களில் நடித்தார்.

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜசுலோசனா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு 2013 மார்ச் 5 காலையில் தனது 77வது அகவையில் காலமானார். இவருக்கு ஷியாம் சுந்தர், ஸ்ரீ, தேவி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் ராவ் காலமானார்.

இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

பெண்ணரசி, ரங்கூன் ராதா, அம்பிகாபதி, அரசிளங்குமரி, படித்தால் மட்டும் போதுமா, வணங்காமுடி, எங்க வீட்டு வேலன்