Saturday, April 18
Shadow

கோக்,பெப்சி, குடிப்பதை நிறுத்திவிட்டேன்.! எனது படங்களில் காட்டவும் மாட்டேன்.! தன்மான தமிழன் முருகதாஸ்.!

தன் படம் மூலம் அயல் நாட்டு குளிர் பானங்கள் நம் நாட்டு தண்ணீரை திருடுவதால் விவசாயம் நாசம் அடைகிறது என்ற கருத்தை முன் வைத்த இயக்குனர் என்றால் அது இயக்குனர் முருகதாஸ் தான் கத்தி படம் மூலம் சொன்னவர் ஆனால் இது நாள் வரை அவரே இதை கடைபிடிக்கவில்லை ஆனால் இப்ப நடந்த போராட்டம் அவர் மனதையும் கரைத்து விட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் விவசாயிகளை காக்க வேண்டும்,அந்நிய நாட்டு பொருட்களை ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துகளும் இந்த போராட்டத்தின் போது முன் வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில கடைகளில்,கோக்,பெப்சி போன்ற அன்னிய நாட்டு பானங்கள் தடை செய்யப்பட்டு,இளநீர்,பதநீர் போன்ற இயற்கை பானங்கள் விற்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோக்,பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”3 ஆண்டுகளுக்கு முன்பு கத்தி படத்திற்கான கதையை எழுதும் போதே,கோக்,பெப்சி போன்ற அந்நிய நாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்திவிட்டேன்.

தற்போது நான் இயக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களிலும் அந்நிய நாட்டு பானங்களை தடை செய்துள்ளேன்.”என தெரிவித்துள்ளார். அவைகளை எனது படத்திலும் காட்டமாட்டேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply