தமிழியில்ர குருகுயய காலத்தில்தனக்கென முக்கிய இடைத்தை பிடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் ஹிட்டுக்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விட்ட கீர்த்தி சுரேஷ், நடிப்பில் அடுத்தடுத்து தொடரி, ரெமோ, விஜய் -60 ஆகிய படங்கள் ரிலீசாகின்றன. இதையடுத்து சூர்யா உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கும் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தெலுங்குப்பட வாய்ப்புகள் வந்தபோதும், தமிழ் படங்களுக்கு போக மீதமிருக்கும் நாட்களில் மட்டுமே தெலுங்கு படங்களுக்கு கால்சீட் கொடுக்கிறார். அந்தவகையில், தற்போதைக்கு தமிழுக்கே முதலிடம் கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். மேலும், சினிமாவில் வளர்ந்து வரும்போது சில நடிகைகள் காதல் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வார்கள். ஆனால், கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் அனைவரிடமும் நட்பாக பழகி வருகிறேன். ஆனால் அந்த நட்பு இதுவரை யாரிடமும் காதலாக மாறவில்லை. அதேசமயம், யார் மீதாவது காதல் வந்தால் கண்டிப்பாக காதலிப்பேன். காரணம், எனது பெற்றோர் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள் என்பதால் காதலை மதிப்பவர்கள். அதனால் எனக்கு யாருடனாவது காதல் ஏற்பட்டு, அதை நான் என் பெற்றோரிடம் சொன்னால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள். எனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டி என்னை வரவேற்பார்கள் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.